Now Playing

Deva/Hariharan/Harini, Vijay, Ramba

Ootha Ootha

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

Album Art Now playing

Ootha Ootha

Deva/Hariharan/Harini, Vijay, Ramba

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Raagavil Raaganggal Current Show

Raagavil Raaganggal

Devotional songs are hymns which accompanies religious observances and rituals. Raagavil Raagangal… An hour of devotion to start your day feeling blessed. Monday to Sunday from 5am to 6am, join us as we take you on a spiritual journey with our beautiful Devotional songs and Inspiring quotes.

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

2019 SPM: தமிழ் கல்வியின் அவசியம்!

Mar 06, 2020


2019 SPM தேர்வில் தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியப் பாடங்களில் மாணவர்கள் தேசிய நிலையிலான சிறந்த தேர்ச்சியைப் பெற்றுள்ளனர்.

அத்தேர்வில் சுமார் ஒன்பதாயிரத்து 48 மாணவர்கள் தமிழ் மொழி தேர்வெழுதிய வேளை, ஈராயிரத்து 800 மாணவர்கள் தமிழ் இலக்கியப் பாடத்திற்கான தேர்வை எடுத்துள்ளனர்.

அவர்களில்,  42 விழுக்காட்டினர் தமிழ் மொழிப் பாடத்தில் சிறந்த தேர்ச்சிப் பெற்றுள்ளனர்; 32.1 விழுக்காடு மாணவர்கள் இலக்கியப் பாடத்தில் சிறந்த தேர்ச்சிப் பெற்றிருப்பதாக மலேசிய தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகத்தின் தோற்றுநரும் -  தலைவருமான பி.எம்.மூர்த்தி தெரிவித்தார்.

மாணவர்களின் இந்த அடைவு நிலைக்கு, பெற்றோர்கள், பொது அமைப்புகள், அரசு சாரா இயக்கங்கள் ஆகியவற்றின் முயற்சிகளுடன் சேர்த்து இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் மொழி மற்றும் இலக்கியம் போதிக்கின்ற ஆசிரியர்களின் பங்களிப்பும்  முக்கிய காரணம் என்றாரவர்.

சில இடைநிலைப்பள்ளிகளில், பாட அட்டவணையில் இப்பாடங்கள் இடம்பெறாத சூழ்நிலையில், ஆசிரியர்கள் சொந்த முயற்சியில், வார இறுதி நாட்களில் இப்பாடங்களை மாணவர்களுக்கு போதித்து வரும் முயற்சியை அவர் பாராட்டினார்.


தேர்ச்சி நிலை சிறப்பாக இருந்தாலும், இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடத்தை கற்கும் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்துக் கொண்டே போகும் நிலை கவலையளிப்பதாகவும் மூர்த்தி தெரிவித்தார்.

ஆரம்பப் பள்ளி கல்வியை முடித்து இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களில் சிலர் அங்கு மூன்றாம் படிவம் வரை தமிழ் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

நான்காம் படிவம் சென்றதும் சில மாணவர்கள், தேர்வுக்கான பாடங்களை குறைக்கும் நோக்கில் முதல் தேர்வாக தமிழ் மொழியையும் - தமிழ் இலக்கியத்தையும் தங்களது பட்டியலில் இருந்து நீக்க முடிவெடுக்கின்றனர்.

இதனால், SPM தேர்வில் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய தேர்வுகளுக்கு அமரும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் சூழ்நிலை ஏற்படுவதாக அவர் சொன்னார்.

எனவே, இந்த சிக்கலுக்கு ஆசிரியர்கள் மட்டும் இன்றி, தமிழ் சார்ந்த அனைத்து தரப்பினரும் தீர்வுக் காண முன் வர வேண்டும் என்றும் மூர்த்தி கேட்டுக் கொண்டார்.

கல்வித் துறையில், தமிழ்பள்ளிகள், இடைநிலைப் பள்ளிகள், மாநில - மாவட்ட கல்வி இலாகா ஆகியவற்றை தவிர்த்து, ஊடகத் துறை, வார - மாத தமிழ் பத்திரிக்கைகள் மற்றும் இதழ்கள் ஆகிவற்றையும் தாண்டி, மலேசியாவில் தற்போது நல்ல வளர்ச்சி கண்டு வரும் கலைத் துறைக்கும் தமிழ் கல்வி கற்றவர்கள் அதிகம் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

சிறந்த தமிழ் எழுத்தாளராக, பாடலாசிரியராக, மொழிப் பெயர்பாளராக இம்மாணவர்கள் பிற்காலத்தில் மிளிர வாய்ப்பிருப்பதாகவும் அவர் சொன்னார்.
 
எனவே, இடைநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் தமிழ்கல்வியை தொடர ஊக்குவிக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us