← Back to list
வெளிநாட்டில் பதிவான வாகனங்களுக்கு கெட்ட செய்தி !

வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மானிய விலையில் RON95 பெட்ரோல் வாங்குவதைத் தடை செய்வது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது !
இதற்கான புதிய விதிமுறைகள், ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் அமல்படுத்தப்படும் என உள்நாட்டு வாணிப, வாழ்க்கை, செலவீன அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகள், RON95 பெட்ரோலை இவ்வாகனங்களுக்கு விற்பனை செய்யும் நிலையங்களை மட்டுமே தண்டிக்கவல்லதாகும்.
அதாவது, பெட்ரோல் நிலைய நடத்துநர்களுக்கு எதிராக மட்டுமே சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்; வாங்குபவர்களுக்கு அல்ல.
----------
இவ்வாரம் கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு, பத்துமலை திருத்தலத்தின் ஆற்றங்கரையில் சிறப்பு பூஜைகளுடன் வேல் நிறுவப்பட்டுள்ளது !
பக்தர்கள் ஆற்றங்கரையில் இருந்து தான் காவடி, பால் குடம் ஏந்தி வருகின்றனர்.
இதனால் அவர்கள் இந்த வேலை வழிப்பட்டு வரும் நோக்கில், ஆற்றங்கரையில் வேல் நிறுவப்பட்டதாக, KL ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான் ஸ்ரீ R.நடராஜா தெரிவித்துள்ளார்.
----------
இவ்வேளையில், ஜனவரி 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நான்கு நாட்களுக்குத் தொடர்ச்சியாகச் சிறப்புச் சேவைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, இந்தியச் சமூகத்திற்குத் தேவையான வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் தகவல்கள் வழங்கப்படவுள்ளதாக, மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது !
தண்ணீர்மலை, பத்துமலை, கல்லுமலை, சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் மற்றும் மற்ற முருக திருத்தலங்களில் நடைபெறும் தைப்பூசத்தை, வெள்ளிக்கிழமை இரவு 9 மணி, தொடங்கி, பிப்ரவரி 1-ஆம் தேதி இரவு மணி 11.59 வரை, Astro விண்மீனில் நேரலையாகக் காணலாம்.
-----------
சீனப் புத்தாண்டு தொடங்கி, மலேசியர்கள் பெருநாள் காலங்களில், 24 மணி நேர ETS ரயில் சேவையை அனுபவிக்கலாம் என போக்குவரத்து அமைச்சர் Anthony Loke தெரிவித்துள்ளார் !
பெருநாள் மற்றும் பொதுவிடுமுறை காலங்களில், பயணிகள் அதிகமாக இருக்கும் போது, ETS ரயில் சேவைகள் அதிகரிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
---------
முன்னாள் அமைச்சர் Datuk Seri Rafizi Ramli-யின் மகன் மீது, கடந்தாண்டு நடந்த தாக்குதல் சம்பவத்தின் விவரங்கள், பொதுமக்களுக்கு வெளியிடப்படாது என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் !
அச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருக்க, அது அவசியமாவதாக அவர் கூறினார்.
---------
இந்தியா மும்பையில் கைதாகி, இன்று காலை மலேசியா கொண்டுவரப்பட்ட, கேப்டன் பிரபா கும்பலின் மூன்று உறுப்பினர்கள் தொடர்பான விசாரணையை, புக்கிட் அமான் கையில் எடுத்துள்ளது !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather