← Back to list
வார இறுதியில் MINI THAIPUSAM !
Jan 24, 2026

பினாங்கில், தைப்பூச நிகழ்வின் போது, தண்ணீர் பந்தல்கள் மற்றும் வணிக பந்தல்களில் இரவு மணி 11க்கு இசை ஒலிகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது !
போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தவும் அவ்வாறு செய்யப்படுவதாக, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு செய்வதால், தைப்பூசத் திருநாளின் கொண்டாட்டம் முடிந்து விட்டதாக அர்த்தம் இல்லை.
பந்தல் நடத்துநர்கள், வணிகர்கள், பக்தர்கள் இரவு முழுவதும் தங்களின் பணிகளையும், புனித சேவைகளையும் தொடர்ந்து செய்யலாம் என வாரியம் கூறியது.
பிப்ரவரி 1 ஆம் தேதி இரவு மட்டுமே அந்த உத்தரவு பொருந்தும் என வாரியம் சொன்னது.
இவ்வாண்டு,தைப்பூசத் திருநளின் போது, பினாங்கு தண்ணீர் மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
--
இதனிடையே,சிலாங்கூர் பத்துமலை ஸ்ரீ சுப்பரமணியர் திருத்தளத்தில், இவ்வாண்டு தைப்பூசத்திற்கு 3.5 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கபடுகிறது !
அவ்வாறூ, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் அறங்காவலர்,மற்றும் மஹிமா தலைவர் டத்தோ சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இப்போதே,ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற திரண்டுள்ளதாக கூறிய அவர், இவ்வார இறுதியை MINI THAIPUSAM என்றும் வர்ணித்தார்.
--
படிவம் 3 மாணவர்களுக்கான தேர்வு, போட்டி அல்லது அழுத்தம் தரும் ஒன்றல்ல.
அது, மாணவர்களின் திறனை மதிப்பிடுவதோடு, அந்த அடைவு நிலையைக் கொண்டு அவர்கள் படிவம் நான்கில் ஏதுவான பாடப்பிரிவை தேர்வுச் செய்யலாம் என கல்வி அமைச்சர் Fadhlina Sidek விளக்கினார்.
--
இதனிடையே, UPSR தேர்வு மீண்டும் கொண்டு வரப்படாது என கல்வி அமைச்சர் தெரீவித்துள்ளார்.
அது, இன்றையச் சூழலில் மாணவர்களின் வளர்ச்சிக்கு ஏற்புடையதல்ல என அவர் கூறினார்.
2021 ஆம் ஆண்டு UPSR-உம் 2022 ஆம் ஆண்டு PT3-உம் ரத்து செய்யப்பட்டு, பள்ளி அடிப்படையிலான மதிப்பீட்ட்டுக்கு மாற்றப்பட்டது.
--
பொது இடங்களில் குப்பைகள் வீசப்படுவதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ், இதுவரை 400க்கும் மேற்பட்ட குற்ற அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அவற்றில் சுமார் 300 குற்றங்கள் உள்ளூர்வாசிகளை உட்படுத்தியது என்றும், எஞ்சியவை வெளிநாட்டினரை உள்ளடக்கிய்து என்றும் SWCorp தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் குப்பைகள் வீசப்படுவதைத் தடுக்கும் சட்டம் ஜனவரி 1 அமுலுக்கு வந்தது.
அது உள்நாட்டினர் வெளிநாட்டினர் என்றில்லாமல் அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும் பொதுவான ஒரு சட்டமாகும்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather