Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மேலவை உறுப்பினர்களாக, மீண்டும் மூன்று அமைச்சர்கள் !

Dec 03, 2025


மேலவை உறுப்பினர்களாக, மீண்டும் மூன்று அமைச்சர்கள் !

மூன்று அமைச்சர்கள் இன்று மேலவை உறுப்பினர்களாக இரண்டாம் தவணையில், பதவியேற்றனர். 

மேலவை உறுப்பினர் என்பது, மூன்றாண்டு கால பதவி, ஆனால்,ஒருவர் அதிகபட்சமாக இரண்டு தவணையில் மட்டுமே அந்த பதவியை வகிக்க முடியும். 

அவர்கள் உள்துறை அமைச்சர், Datuk Seri Saifuddin Nasution Ismail , உயர் கல்வி அமைச்சர், Datuk Seri Zambry Abd Kadir மற்றும் பிரதமர் துறை அமைச்சர் Datuk Mohd Na’im Mokhtar ஆவர்.  

-- 

மாட்சிமை தாங்கிய மாமன்னர் Sultan Ibrahim  இன்று தேசிய அரண்மனையில்,  ஐந்து நீதிபதிகளுக்கு பதவிநியமன ஆவணங்களை வழங்கினார். 

மலாயா தலைமை நீதிபதி Datuk Hashim Hamzah-உம் ஆவணங்களைப் பெற்றவர்களில் ஒருவர். 

--

நாடு முழுவதும் உள்ள குடிநுழைவுத்துறை முகாம்களில் 2,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்! 

அது, சட்ட விரோத குடியேறிகளின் மொத்த எண்ணிக்கையில் 11%க்கும் அதிகம் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

கடந்த இரண்டு ஆண்டுகளின் தரவுகளுடன் ஒப்பிடுகையில், அவ்வெண்ணிக்கை மிகுந்த அதிகரிப்பு தான் என அது சொன்னது. 

தடுத்து வைக்கப்பட்டுள்ள அச்சிறுவர்கள் விரைவில் சிறுவர் நல அமைப்புகளின் கீழ் பராமரிக்கப்படுவார்கள் என அமைச்சு உறுதியளித்தது. 

-- 

நாட்டில் வெள்ள நிலைமையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. 

சமூக நல துறையின் ஆகக் கடைசி தகவல் படி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 6000 ஆகக் குறைந்துள்ளது. 

3,000 க்கும் மேற்பட்டோர் பேராக் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாவர். 

பெர்லிஸ் சிலாங்கூரில் தலா ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பஹாங்கில் 127 பேர் மட்டுமே துயர் தடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர். 

-- 

இவ்வேளையில், வெள்ள நிலமையைக் கையாளும் முயற்சியில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது ! 

பிரதமர்  அதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். 

வெள்ளத் தடுப்பு திட்டங்களை உடனடியாக அமல்படுத்தவும், மக்கள் நலன் மற்றூம்  பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் பிரதமர் உறுதியளித்துள்ளார். 

-- 

48 விழுக்காட்டுக்கும் அதிகமான வர்த்தக வாகனங்கள் தற்போது தானியங்கி வேக வரம்பு சாதனங்களைப் பயன்படுத்துகின்றன. 

அக்டோபரில் அந்த விதிமுறை அமலுக்கு வந்தபோது அது 3  விழுக்காட்டுக்கும் குறைவாகவே இருந்தது. 

கடுமையான அமலாக்கத்தால் அந்த முன்னேற்றம் காணப்படுவதாக, சாலை போக்குவரத்து துறை தெரீவித்துள்ளது. 

-- 

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us