← Back to list
பள்ளிகளில் மீண்டும் பிரம்படி தண்டை தேவை !
Nov 27, 2025

பள்ளிகளில் பிரம்படி தண்டனை மிண்டும் படிப்படியாக கொண்டு வரப்பட வேண்டும் என, சிலாங்கூர் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார் !
ஆனால், ஆசிரியர்கள் அதனை கட்டுப்பாடுகளுடன் மேற்கொள்வது அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
பள்ளிகளில் பகடிவதை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதே அதற்குக் காரணம் என அவர் கூறினார்.
கடந்தாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, சிலாங்கூரில் மட்டும் 108 மாணவர்கள் பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
--------
தாய்லாந்து Hatyai-யில் வெள்ளத்தால் சிக்கிக்கொண்டிருக்கும் UUM பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் என 40 பேரும், பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் !
அவர்கள் தற்போது வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பின்னர் அவர்கள் தாயகத்துக்குக் கொண்டுவரப்படுவர் என நம்பப்படுகிறது.
----------
மற்றொரு பக்கம், நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் நல்ல மாதிரியான முன்னேற்றம் எதுவும் தெரியவில்லை !
அப்பேரிடரால் 27-ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள வேளை, கிளாந்தானில் மட்டும் எட்டாயிரத்துக்கும் அதிகமானோர் வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
----------
இவ்வேளையில், தற்போதைய வானிலை குறித்து விழிப்புடன் இருக்கும்படி, மலேசிய வானிலை ஆய்வு மையம் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளது !
மலாக்காவில் வெப்பமண்டல புயல் நிலவியிருப்பதாகக் கூறியிருக்கும் அம்மையம், அதனால் பல மாநிலங்களில் சனிக்கிழமை வரை தொடர்ச்சியான கனமழை பெய்யலாம் என எச்சரித்தது.
----------
கெடா சுங்கை பட்டாணியில், பள்ளி மாணவன் மயங்கி விழும் அளவுக்கு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், 16 வயது மாணவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான் ; அச்சம்பவம் தொடர்பில் முன்னதாக நான்கு மாணவர்கள் கைதாகினர் !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather