Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

இந்திரா காந்தியின் முன்னாள் கணவருக்கு வலைவீச்சு !

Nov 26, 2025


இந்திரா காந்தியின் முன்னாள் கணவருக்கு வலைவீச்சு !

 

இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் பத்மநாதன் கிருஷ்ணனை தேடி கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக, தேசிய காவல்படை தலைவர் தெரிவித்துள்ளார் ! 

அவரை கண்டுபிடித்து, இந்திரா காந்தியின் மகளை அவரிடம் ஒப்படைக்குமாறு, ஈப்போ உயர்நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவுக்கு ஏற்ப, காவல்துறை செயல்படும் என IGP சொன்னார். 

நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில், தமது தரப்பு உறுதியுடன் இருப்பதாக அவர் சொன்னார். 

இவ்வேளையில், இந்திரா காந்தியின் முன்னாள் கணவரின் விவரங்களைப் பயன்படுத்தி, Budi 95, SARA போன்ற அரசாங்க உதவித் திட்டங்களை, யாரோ அனுபவிப்பதாகக் கூறப்படும் புகார்கள் குறித்தும்,  விசாரித்து வருவதாக அவர் கூறினார். 

11 மாத குழந்தையாக இருந்தபோது, முன்னாள் கணவரால் எடுத்துச் செல்லப்பட்ட மகள் பிரசன்ன டிக்சாவை, தம்மிடம் ஒப்படைக்கக் கோரி, 16 ஆண்டுகளாக இந்திரா காந்தி சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.

------------   

வெள்ளத்தைச் சமாளிக்க, நாடு முழுவதும் கிட்டத்தட்ட பத்தாயிரம் அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதோடு, ஏழாயிரம் செயல்பாட்டு உபகரணங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன  ! 

அவர்கள் அனைவரும் பல்வேறு அரசாங்க நிறுவனங்களைச் சேர்ந்தவர்களாவர் என துணைப் பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi, அதனை தெரிவித்துள்ளார். 

------------ 

நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 27-ஆயிரத்தைக் கடந்துள்ளது !

ஆக அதிகமாக, கிளாந்தானில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள வேளை, பேராக்கில் நான்காயிரத்துக்கும் அதிகமானோர் PPS மையங்களில் டுள்ளனர். 

----------- 

இன்று முழுவதும் பெர்லிஸ், கெடா, பேராக்கில் பெரும்பாலான பகுதிகளில், தொடர் மழை பெய்யலாம் எனவும், திரங்கானு, கிளாந்தானில், வரும் வெள்ளிக்கிழமை வரை கடுமையான தொடர்மழை பெய்யலாம் எனவும், மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ! 

------------ 

பினாங்கு Batu Kawan-னில், கேட் கதவொன்று விழுந்ததில், நேப்பாலிய ஆடவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்துள்ளது ! 

அவர் அந்த கதவை திறக்க முயன்ற போது, அச்சம்பவம் நிகழ்ந்தது.

------------- 

கெடா பாலிங்கில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தனது தம்பி மற்றும் உறவுக்கார ஒருவரைக் கொலை செய்த 41 வயதான நபரின், 24 பிரம்படிகளுடன் கூடிய  35 ஆண்டுகள் சிறைத்தண்டனை நிலைநிறுத்தப்படுகிறது !


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us