Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மின் கம்பிகளைத் தொடாதீர்கள் !

Nov 25, 2025


மின் கம்பிகளைத் தொடாதீர்கள் !

மின்சாரம் மற்றும் எரிவாயு பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் ! 

தற்போதைய வெள்ள நிலைமயைச் சுட்டிக்காட்டி, எரிசக்தி ஆணையம் அந்த எச்சரிக்கையை வழங்கியுள்ளது. 

வெள்ளத்தின் தாக்கத்தினால் விழும், மின் கம்பங்கள், மின் கம்பிகள் மற்றும் எரிவாயு சாதனங்கள் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தலாம் என அவ்வாணையம் விளக்கியது. 

மேலும், மின்சார சாதனங்கள் மற்றும் பொருட்களை இடமாற்றம் அல்லது அகற்றப்படும் போது மின்சார இணைப்பு துண்டிக்கப்பட வேண்டும் என அது நினைவூட்டியது. 

-- 

நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக, பல மாநிலங்களில் எற்படும் வெள்ள நிலைமையைக் கையாள அனைத்து பாதுகாப்பு அமைப்புகளையும் ஒன்று திரட்டியுள்ளது,  தேசிய பேரிடர் நிர்வாகக் குழு. 

மேலும், உயர் அபாயப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக துணை பிரதமர் கூறினார். 

என்றாலும் , பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைக் கேட்டு பின்பற்றுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். 

இதனிடையே, வெள்ள நிவாரண மையங்களில் உணவு உள்ளிட்ட தேவையான உதவிகள் அனைத்தும் முழுமையாக வழங்கப்படும் என துணை பிரதமர் உறுதியளித்தார். 

-- 

இவ்வேளையில், சமூக நலத் துறையின் ஆகக் கடைசி தகவல் படி, துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை பதினெட்டாயிரத்தை கடந்துள்ளது. 

சுமார் பத்தாயிரம் பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், கிளந்தான் மிகவும் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. 

பேராக்கிலும், சிலாங்கூரிலும் அவ்வெண்ணிக்கை மூவாயிரத்தை நெருங்குகிறது. 

கெடா, பெர்லிஸ், மாநிலங்களில், தலா 1000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பினாங்கில் 377 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர். 

-- 

16 வயது மற்றும் அதற்கு குறைவானவர்கள் தனிநபர் சமூக ஊடக கணக்குகளைத் திறக்க அரசாங்கம் அடுத்தாண்டு முதல் தடை விதிக்கவுள்ள நிலையில், அதற்கு அனுமதி வழங்கும் பெற்றோர்களுக்கு தண்டனை விதிப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 

-- 

பாலிவுட்டின் He-Man என அழைக்கப்படும் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா, தனது 89-வது வயதில், காலமானார்.  

அவரின் மறைவு,  இந்திய சினிமாவில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிப்பதாகக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி, அவரின் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டார். 

60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் இருந்த அவர் 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us