← Back to list
நாடு வெள்ளக் காடாகிறது !
Nov 24, 2025

நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 13-ஆயிரத்தைக் கடந்துள்ளது !
கிளாந்தானில் மட்டும், 9-ஆயிரத்து 600 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பேராக்கில், 1,700 பேர் பாதிக்கப்பட்டுள்ள வேளை, பெர்லிசில், 600 பேர் துயர்துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியிருக்கின்றனர்.
எஞ்சியவர்கள், கெடா, சிலாங்கூர் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளனர்.
இவ்வேளையில், கெடா மற்றும் பெர்லிசில் பெரும்பாலான பகுதிகளில், இவ்வார புதன்கிழமை வரை, தொடர்ச்சியான கனமழை பெய்யலாம் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
----------
இதனிடையே, சிலாங்கூர் ஷா அலாமில் பல சாலைகள் இன்னும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன ; ஆனாலும் அவை வாகனங்கள் செல்லக்கூடிய நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் !
அண்மைய போக்குவரத்து நிலவரங்களைத் தெரிந்துகொள்ள, Astro Audio Traffic சமூக ஊடகங்களை வலம் வரலாம்.
---------
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள், இணையம் வழி கற்றல் கற்பித்தல் முறையை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாக, உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது !
--------
தாய்லாந்து Hatyai-யில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் UUM பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், மாணவர்கள் என 40 பேரை வெளியேற்றும் நடவடிக்கை, தொடர்மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது !
----------
இதனிடையே, தாய்லாந்து மற்றும் வியட்நாமில் வெள்ளம் மோசமடைந்து வருவதை அடுத்து, அவ்விரு நாடுகளுக்கான பயணத்தை ஒத்திவைக்கும்படி, மலேசியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் !
---------
ஜொகூர் பத்து பஹாட்டில், லாரியில் இருந்து 100 கிலோ எடையுள்ள இரும்பு துண்டு, காரின் முன் கண்ணாடியில் விழுந்ததில், நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather