← Back to list
மாணவர் குற்றச் சம்பவங்கள் ; மாமன்னர் கவலை !
Nov 19, 2025

மாணவர்களை உட்படுத்திய அண்மைய கடுமையான குற்றங்கள் குறித்து, பேரரசர் Sultan Ibrahim கவலை தெரிவித்துள்ளார் !
எனவே, மனிதநேயம், நெறிமுறைகள், உணர்ச்சி கட்டுப்பாடு, சட்ட விழிப்புணர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில், கல்வி முறையை மறுசீரமைக்கும்படி, கல்வி நிறுவனங்களை அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், இலக்கவியல் தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டை எச்சரித்த அவர், தொழில்நுட்பத் தடைகள் போன்ற விரைவான நடவடிக்கைகள் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
----------
மற்றொரு நிலவரத்தில், கோலாலம்பூர் Setapak-கில், பள்ளிக்கு மட்டம் போட்ட காரணமாக திட்டிய தந்தையை, கத்தியால் வெட்டி காயத்தை ஏற்படுத்திய SPM தேர்வெழுதவிருக்கும் மகன் கைது செய்யப்பட்டுள்ளான் !
-----------
சலோமா சந்திப்புக்கு அருகே கிள்ளான் ஆற்றில், நீர் பெருக்கெடுப்பினால் ஆடவர் ஒருவருடன் அடித்துச் செல்லப்பட்ட வாகனம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது !
பாதிக்கப்பட்ட ஆடவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
---------
இதனிடையே, கோலாலம்பூர், ஜொகூர் உட்பட, சில மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது !
அப்பகுதிகளில், இன்றிரவு 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
---------
நவம்பர் 29-ஆம் தேதி நடைபெறும், சபா மாநில தேர்தலை முன்னிட்டு, 22-ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஞ்சல் வாக்குச் சீட்டுகளை, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather