← Back to list
செகாமாட் நிலநடுக்கம்; சேதம் இல்லை !
Nov 04, 2025

ஜொகூர் செகாமாட்டில் நேற்றிரவு ஏற்பட்ட வலுவற்ற நிலநடுக்கத்தால், யாருக்கும் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை !
அப்பகுதிவாழ் மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய, மாநில அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
நேற்றிரவு 8 மணி வாக்கில், அங்கு 2.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதன் அதிர்வுகள், செகாமாட் அருகிலுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டன.
---------
இதனிடையே, ஜொகூரில் பெரும்பாலான இடங்களில் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளது !
இன்னும் சில இடங்களில் அதன் விநியோகம் இன்னும் திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு கடந்த வெள்ளிக்கிழமை, மணல் கழுவும் குளம் உடைந்து ஆறு மாசுமாடு ஏற்பட்டதால், அட்டவனையிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டது.
----------
தலைநகர் Jalan Ipoh-வில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிக்கு வெளியே பாதுகாவாலர் தாக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு மாரடைப்பினால் மரணமுற்ற சம்பவம், கொலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது !
அச்சம்பவத்துக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நபரிடமிருந்து துப்பாக்கி போல தோன்றும் பொருள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் , முன்பே சந்தேக நபர் மிரட்டல் விடுப்பது குறித்து காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
---------
கெடாவில் வெள்ளத்தால் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிளாந்தானில் 10 பேர், துயர்துடைப்பு மையத்தில் இருக்கின்றனர் !
----------
கோலாலம்பூரில் மிகவும் பிரசித்திப்பெற்ற மெர்டெக்கா 118 கோபுரம், 300 மீட்டர் மற்றும் அதற்கும் மேற்பட்ட உயரம் கொண்ட சிறந்த கட்டிடமாக, அனைத்துலக அமைப்பொன்றால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather