Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

அரசியல் தலைவர்களின் வாழ்த்துக்களோடு தீபாவளி கொண்டாட்டம் !

Oct 20, 2025


அரசியல் தலைவர்களின் வாழ்த்துக்களோடு தீபாவளி கொண்டாட்டம் !

தீபாவளி என்பது கலாச்சாரம் மற்றும் மதக் கொண்டாட்டம் மட்டுமல்ல! 

மனிதநேயம், நீதி மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் கொண்டாட்டம் என வர்ணிக்கிறார், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம். 

நாட்டில் தீபாவளியை கொண்டாடும்  அனைத்து இந்துக்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர், இவ்வாண்டு தீபாவளி கொண்டாட்டம், ஒடுக்குமுறைகளையும் இருளையும் நீக்கக்கூடிய ஒளியாகவும் மலேசியர்களை முன்னேற்றப்  பாதைக்கு இட்டுச் செல்வதற்கான அடையாளமாகவும் இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

உலகெங்கிலும் உள்ள இந்துக்களால், இன்று கொண்டாடப்படும், தீபாவளி திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் அமைதியையும் தர வேண்டும் என பிரதமர் காணொளி வாயிலாக தெரிவித்தார். 

--

இவ்வேளையில், மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமும், அரசியார் Raja Zarith Sofiah-வும், தீபாவளியைக் கொண்டாடும், நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் ஒளிமயமான நல்வாழ்வும், மகிழ்ச்சி, மற்றும் செழிப்பு ஆகியவற்றை கொண்டுவரும் விதமாக அத்திருநாள் அமையட்டும் என, அவர்கள் இருவரும் வாழ்த்தியுள்ளனர். 

-- 

இணையம் மற்றும் சந்தைகளில், Influenza சுய பரிசோதனை கருவிகள் அதிகரித்து வருவதை அடுத்து, அங்கீகரிக்கப்ப்ப்பட்ட பரிசோதனை கருவிகள் எதும் இன்னும் வெளியிடப்படவில்லை என  மலேசிய பொது சுகாதாரம் தெரிவித்துள்ளது. 

துல்லியமான முறையில்  இன்ஃப்ளூயன்ஸா தொற்றைக் கண்டறிய,மருத்துவரை அணுகுமாறு பொதுமக்களுக்கு, அது அறிவுறுத்தியது. 

--

SARA, BUDI95 பெறுநர்களின் தரவுகள் மற்றும் அடையாள பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், MyKad அமைப்பின் பாதுகாப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என தேசிய பதிவு துறை, உறுதியளித்துள்ளது. 

MyKad தவறாக பயன்படுத்தப்பட்டு, உதவித் தொகையை இழந்தவர்கள், அதனை மீட்டெடுக்க காவல் துறையில் புகார் அளிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். 

-- 

கெடா, கூலிமில் வெள்ள நிலைமை சீரடைந்து வரும் நிலையில், இரண்டு துயர் துடைப்பு மையங்கள் மூடப்பட்டுள்ளன. 

என்றாலும், மழை பெய்யும் சமயம் விழிப்புடன் இருக்கவும், மீண்டும் வெள்ளம் ஏற்பட்டால் உடனடியாக வெளியேறவும் குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்  

இதனிடையே, ஜொகூர் Pontian-நில்  80க்கும் மேற்பட்டவர்கள் வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மலாக்கா ஜாசினில், 50 பேர், துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us