Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் !

Oct 17, 2025


மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் !

 

பள்ளிகளில், மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் ! 

எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும்படி, பிரதமர் PDRM மற்றும் உள்துறை அமைச்சிற்கு உத்தரவிட்டுள்ளார். 

மாணவர்களை உட்படுத்திய அண்மைய குற்றச் சம்பவங்களைத் தொடர்ந்து, எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகளில், இதுவும் அடங்கும். 

பள்ளிகளில் காவல்துறையினர் வருகை புரிந்து கண்காணிப்பது, பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் என அரசாங்கப் பேச்சாளர் Datuk Fahmi Fadzil தெரிவித்தார். 

இதனிடையே, 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் தொலைப்பேசிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது, சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது போன்ற பரிந்துரைகள் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டன. 

--------- 

மற்றொரு பக்கம், பினாங்கில், விடுதிகளுடன் கூடிய பள்ளிகளில், ரோந்து அதிகாரிகள் பணியமர்த்தப்படுவர் !  

அவர்கள் அப்பள்ளிகளை கண்காணிப்பர் என மாநில காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.  

மேலும், அப்பள்ளிகளில் பள்ளி தொடர்பு அதிகாரிகளை அடிக்கடி பணியமர்த்தும் திட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளது.  

--------- 

சிலாங்கூர் Bandar Utama பள்ளியில் அண்மையில் நிகழ்ந்த மாணவரை உட்படுத்திய கொலை சம்பவத்தை தொடர்ந்து, அங்கு சில உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன ! 

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை இணைக்கும் 'smart notification' அமைப்பு, உலோக பொருட்களைக் கண்டுபிடிக்கும் கருவிகளை பயன்படுத்துவது ஆகியவையும் அதிலடங்கும் என மாநில Menteri Besar தெரிவித்தார். 

--------- 

இதனிடையே, 2027-ஆம் ஆண்டில் அறிமுகமாகவிருக்கும், பள்ளிகளுக்கான புதிய பண்புநல கல்வி குறித்த விவரங்களை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது !  

பாலர் பள்ளிகளில், மாணவர்களின் அன்றாட கற்றல் நடவடிக்கைகளில், அக்கல்வி சேர்க்கப்படும் வேளை, ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளிகளில், பாட அட்டவணையில் ஒரு வாரத்திற்கு ஒரு மணி நேரம், பிரத்தியேகமாக சேர்க்கப்படும் என அமைச்சு கூறியது. 

---------- 

நாடு முழுவதும் நேற்று மட்டும், 1,800-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன; அதில் 11 மரணங்கள் பதிவாகின ! 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us