Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மலேசியாவை இலக்கவியல் நாடாக்கும் முயற்சியில் அரசாங்கம்!

Sep 18, 2025


மலேசியாவை இலக்கவியல் நாடாக்கும் முயற்சியில் அரசாங்கம்!

2030ஆம் ஆண்டுக்குள் மலேசியாவை இலக்கவியல் நாடாக்கும் இலக்கை அடைய அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது! 

அதற்கு முதல்படியாகவே 2023ஆம் ஆண்டு டிசம்பரில் இலக்கவியல் அமைச்சை பிரதமர் அறிமுகப்படுத்தினார் என, இலக்கவியல் அமைச்சர் Gobind Singh Deo தெரிவித்தார். 

கடந்தாண்டு அறிமுகம் கண்ட செயற்கை நுண்ணறிவு அலுவலகம், இவ்வாண்டு திறக்கப்படவுள்ள Govtech அமைப்பு ஆகியவை, தனது இலக்கை நோக்கிய அரசாங்கத்தின் அலாதி முயற்சிகளையே பிரதிபலிக்கின்றன என அவர் தெரிவித்தார். 

செயற்கை நுண்ணறிவும் தொழில்நுட்பமும் அதிகவேக வளர்ச்சி கண்டு வரும் இக்காலகட்டத்தில், அடுத்த ஐந்து முதல் பத்தாண்டுகளில் என்ன நடக்கும் என கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதற்கு நாமும் ஈடுகொடுத்து எதிர்காலத்திற்குத் தயாராகவில்லை என்றால், வளர்ந்து வரும் நாடுகளை விட பின்தங்கிவிடக் கூடும் என நேற்று Kuala Lumpurரில் நடைபெற்ற 2025 MDX உச்சநிலை மாநாட்டை திறந்து வைத்த பிறகு அமைச்சர் கூறினார். 

--------  

தொடர்பு மற்றும் பல்லூடக உள்ளடக்க மன்றம், அதன் உள்ளடக்கக் குறியீட்டில் மாற்றம் செய்ய பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு வருகிறது ! 

செயற்கை நுண்ணறிவு, தவறான தகவல் பரிமாற்றங்கள் மற்றும் இணையங்களில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கையாள அம்மன்றம் அவ்வாறு செய்கிறது. 

-------

வெள்ளம் மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளைக் கண்காணிக்க பிரதமர் DSAI, நாளை சபாவுக்குச் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த வார இறுதியில், ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை பார்வையிடவும் பிரதமர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இவ்வேளையில், துணைப் பிரதமர் மற்றும் மத்திய பேரிடர் நிர்வாகக் செயற்குழு தலைவர், முன்னதாகவே சபாவிற்கு சென்று விட்டனர். 

அம்மாநிலத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்  குறைந்து வருகிறது. 

நேற்று மூவாயிரத்துக்கும் அதிகமானோர் வெள்ள துயர்துடைப்பு மையங்களில் தஞ்சம் அடைந்த நிலையில், அது இன்று ஈராயிரத்து ஐநூறாக குறைந்துள்ளது.  

இதனிடையே, வலுவான நிலச்சரிவினால், ஏற்பட்ட மின் தடையும் நான்கு நாட்களுக்குப் பிறகு,  மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில மின்சார துறை வாரியம் தெரிவித்துள்ளது. 

-------

பல்கலைக்கழகங்களில் பயில மலேசிய மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. 

அனைத்துலக மாணவர்களுக்கு, அதிக இடங்களை வழங்குவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து, உயர்கல்வி அமைச்சு அவ்வாறு தெரிவித்துள்ளது. 

-------

பஹாங், Temerloh-வில் ECRL, கிழக்கு கரை ரயில் சேவை திட்டத்தின் மின்  கம்பிகளை திருடி விற்றதாக நம்பப்படும் எண்மர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதன் மொத்த இழப்பு 8 லட்சத்திற்கும் மேல் என காவல் துறை தெரிவித்துள்ளது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us