← Back to list
புண்படுத்தும் விதமான கருத்து; MCMC விசாரணை !
Jul 19, 2025

தலைமை நீதிபதி நியமனம் தொடர்பில், புண்படுத்தும் விதமாக Instagram-மில் கருத்து வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் நபரை, மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் விசாரிக்கிறது !
விசாரணைக்காக சம்பந்தப்பட்ட நபரின் தொலைப்பேசியும், சிம் கார்டும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவரிடமிருந்து நேற்று Petaling Jaya காவல்துறை வாக்குமூலம் பெற்றது.
நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என MCMC எச்சரித்தது.
-----------
சிலாங்கூர் Bangi-யில் , இரண்டு சிறுவர்கள் சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், குழந்தை பராமரிப்பாளர் உட்பட, ஐவரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன !
அதன் தொடர்பான விசாரணை அறிக்கையை, காவல்துறை தயாரித்து வருகிறது.
சம்பந்தப்பட்ட குழந்தை பராமரிப்பாளர், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது, அவ்விருவரும் வெளியே சென்றதாக, முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
-----------
ஜொகூர் முவாரில், கடந்த திங்கட்கிழமை ஆற்றொன்றில் காரொன்று விழுந்து காணாமல் போனதாகக் கூறப்படும் ஆடவர் ஒருவரைத் தேடும் பணிகள், நிறுத்தப்பட்டுள்ளன !
அவரை கண்டுபிடிக்க முடியாமல் போனதே அதற்குக் காரணமென காவல்துறை தெரிவித்துள்ளது.
----------
சிலாங்கூரில் இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும், 3 உள்நாட்டினர் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் !
----------
ஜொகூர் பாசிர் கூடாங்கில், இரட்டை லாபம் தருவதாகக் கூறி, Whatsapp-பில் வந்த போலி முதலீட்டு திட்டத்தை நம்பி, நபர் ஒருவர் 2 லட்சத்து 62-ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட பணத்தை பறிகொடுத்துள்ளார் !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather