← Back to list
ஈரானிலிருந்து மலேசியர்கள் வெளியேற்றப்படுவர் !
Jun 18, 2025

ஈரானில் இருந்து மலேசியர்கள் விரைவில் வெளியேற்றப்படுவர் !
அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள், வரும் வெள்ளிக் கிழமை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க பேச்சாளர் Datuk Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.
தற்போது, ஈரானில் மலேசியர்கள் அதிகம் இல்லை என்றும் அவர் கூறினார்.
இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக, மலேசியர்கள் ஈரானை விட்டு வெளியேறும்படி Wisma Putra முன்னதாக தெரிவித்திருந்தது.
---------
ஜொகூர் பாருவில் கடந்த வாரம் தனது வீட்டில் இறந்து கிடந்த ஆசிரியரின் நெருங்கிய உறவினரைக் கண்டுபிடிக்க, தேசிய பதிவுத் துறையின் உதவி நாடப்படவுள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவரின் உடல் உரிமை கோரப்படாமல் இருப்பதால், காவல்துறையினரால் அவரது நெருங்கிய உறவினர்களை அடையாளம் காண முடியாமல் போகிறது.
அந்த ஆசிரியர் இறந்து ஒரு மாதம் கழிந்து தான், அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக, முன்னதாக செய்திகள் வெளிவந்தன.
----------
மலாக்காவில், தனது தாயையும் அண்ணனையும் கொலை செய்த குற்றச்சாட்டில், இன்று 17 வயது இளைஞன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான் !
தேர்வுகளால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, பாதிக்கப்பட்ட இருவரையும் கொன்றதாகவும், தனது தம்பியைக் காயப்படுத்தியதாகவும், அவன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
---------
நாடு முழுவதும் நேற்று மட்டும், 1,800-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்ட வேளை, 15 மரணங்கள் பதிவாகின.
---------
இன்று நள்ளிரவு முதல், RON97 மற்றும் டீசல் விலை, லிட்டருக்கு 7 சென் உயர்வதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather