← Back to list
பேருந்து விபத்து; கூடுதல் உதவி !
Jun 11, 2025

பேராக் கெரிக்கில், அண்மையில் நடந்த கோர பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசாங்கம் கூடுதல் உதவியை அறிவித்துள்ளது !
அவ்விபத்தில் கொல்லப்பட்ட 15 UPSI மாணவர்களின் குடும்பங்களுக்கு, தலா பத்தாயிரம் ரிங்கிட் வழங்கப்படும் என அரசாங்க பேச்சாளர் Datuk Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.
அதில் காயமடைந்தவர்களுக்கு, ஐயாயிரம் ரிங்கிட் வழங்கப்படும்.
----------
இதனிடையே, அச்சம்பவம் தொடர்பில் காவல்துறை இதுவரை 18 பேரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவுச் செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநரிடம் நாளை வாக்குமூலம் பெறப்படும்.
--------
இவ்வேளையில், பாதுகாப்பை உறுதிச் செய்ய, போக்குவரத்து அமைச்சு, பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான புதிய தரவுத்தளத்தை அமைக்கும் !
அத்தரவுத்தளம், அலட்சியமாக வாகனம் ஓட்டிய குற்றங்களை வைத்திருப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களை போக்குவரத்து நிறுவனங்கள் பணியமர்த்துவதைத் தடுக்க உதவும் என Anthony Loke தெரிவித்துள்ளார்.
அமலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்தி, கனரக வாகனம் ஓட்டுநர்களும், பொது வாகன ஓட்டுநர்களும், மேம்பட்ட பயிற்சி பெற, அமைச்சு பல முயற்சிகளை மேற்கொள்ளும்.
--------
மற்றொரு பக்கம், 9 FRU கலகத் தடுப்பு விரர்களைப் பலிகொண்ட கடந்த மாதம் ஏற்பட்ட சாலை விபத்து தொடர்பான, போக்குவரத்து அமைச்சின் இடைக்கால அறிக்கை நாளை வெளியிடப்படும்.
--------
அடுத்த மாதம் விரிவுப்படுத்தப்பட்ட விற்பனை சேவை வரி, அமலுக்கு வந்த பிறகு, இறக்குமதி செய்யப்படும் அடிப்படைத் பொருட்களுக்கு, அவ்வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என நிதி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather