← Back to list
தீ விபத்து; 85 பேர் வீடு திரும்பினர் !
Apr 03, 2025

சிலாங்கூர் Putra Heights-சில் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 85 குடியிருப்பாளர்கள், இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் வீடுகளின் பாதுகாப்பை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே, மீண்டும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாக, மாநில MB Datuk Seri Amirudin Shari தெரிவித்துள்ளார்.
அவ்விபத்தால் மொத்தம் 87 வீடுகளும், வளாகங்களும் முற்றிலுமாக சேதமடைந்தன.
பாதிக்கப்பட்ட மற்ற 148 வீடுகள், பழுதுபார்ப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதாக, மாநில MB Datuk Seri Amirudin Shari தெரிவித்துள்ளார்.
--------
இதனிடையே, மலேசியர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் ஆதரவை, முறையான வழிகளில் வழங்கும்படி, MB கேட்டுக்கொகொண்டுள்ளார்.
----------
மற்றொரு நிலவரத்தில், அவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசாங்கம் கூடுதல் உதவிகளை வழங்கலாம் !
அடுத்த புதன்கிழமை நடைபெறும் வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில், அது குறித்து விவாதிக்கப்படும் என விவசாய, உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் Datuk Sri Mohamad Sabu தெரிவித்துள்ளார்.
ஆயினும், அதிகாரிகளின் சேத மதிப்பீட்டைப் பொறுத்து தான், அவ்வுதவிகள் இருக்கும்.
--------
நாளை முதல் மூன்று 3 நாட்களுக்கு, ஒரு நாளில், PLUS நெடுஞ்சாலைகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கலாம்.
நோன்புப் பெருநாள் விடுமுறைக்குப் பிறகு, வாகனமோட்டிகள் தலைநகரத்துக்கு திரும்புவதே அதற்குக் காரணம் என PLUS கூறியதாக, Bernama செய்தி வெளியிட்டுள்ளது.
-------
இதனிடையே, நாடு முழுவதும் நேற்று மட்டும் 1,800-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன; அதில் 16 மரணங்கள் பதிவாகின.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather