← Back to list
மியன்மாரில் வலுவான நிலநடுக்கம் !
Mar 28, 2025

மியான்மாரில் 7.7 Magnitude அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அப்பேரிடரால், மசூதி ஒன்று இடிந்து விழுந்ததில், குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
அதுமட்டுமில்லாமல், அந்நிலநடுக்கத்தால் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில், கட்டடம் ஒன்று சரிந்து விழுந்தது.
அதன் இடிபாடுகளில், 80 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அச்சம்பவத்தில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
அச்சம்பவத்தால், தற்போது பேங்கோக்கில் அவசரக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், அங்கு போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக, AP செய்தி தொடர்பாளர் Jeremy Koh astro அவானியிடன் தெரிவித்தார்.
இதனிடையே, அந்நிலநடுக்கத்தின் அதிர்வு, பினாங்கு உட்பட, நட்டின் சில மாநிலங்களில் உணரப்பட்டதாக, மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆயினும், மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அம்மையம் கூறியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather