Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தமிழ்ப்பள்ளி பிரச்சனைகளுக்கு தீர்வு !

Feb 20, 2025


தமிழ்ப்பள்ளி பிரச்சனைகளுக்கு தீர்வு !

 

தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும். 

இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் அவ்வாறு கூறினார். 

தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில்,  கல்வியமைச்சர் Fadhlina Sidek-குடன் சந்திப்பு நடத்தப்பட்டது. 

அக்கூட்டத்தில் சில பள்ளிகளின் விவகாரங்களை பற்றி கலந்துரையாடப்பட்டது. 

பிரச்சனைகளுக்குத் தீர்வு காண கல்வியமைச்சின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டார்.  

-------- 

இவ்வேளையில், MRSM கல்லூரிகளில் சேரும் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கான, 10 விழுக்காடு இட ஒதுக்கீடு குறைக்கப்படாது ! 

அக்கல்லூரிகளில் 1 விழுக்காட்டு பூமிபுத்ரா மாணவர்கள் மட்டுமே சேர்ந்தாலும், அந்த 10 விழுக்காட்டு ஒதுக்கீட்டை மாரா கல்லூரி மீட்டுக்கொள்ளாது என அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனினும், MRSM கல்லூரிகளில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களின் எண்ணிக்கையில், இவ்வாண்டு மேம்பாடு இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

1972-ஆம் ஆண்டில், பூமிபுத்ரா மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட MRSM கல்லூரிகளில், 2002-ஆம் ஆண்டு  முதல்,  பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கும், 10 விழுக்காட்டு இடங்கள் ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

----------- 

உயர்க்கல்வியைத் தொடர விரும்பும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவுவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது ! 

அவர்களுக்கு நிதியுதவி வழங்குவதும், உயர்கல்விக்கூட வளாக வசதிகளை அவர்கள் முறையாக அணுகுவதை உறுதிச் செய்வதும் அதிலடங்கும் என உயர்கல்வியமைச்சர் Datuk Seri Dr Zambry Abdul Kadir தெரிவித்துள்ளார். 

உயர்கல்விக்கூட வளாகங்களில், குறிப்பாக பழைய உயர்கல்விக்கூடங்களில், இன்னும் அதற்குப் பிரச்சனைகள் இருப்பதாக ஒப்புக்கொண்ட அவர், தமதமைச்சு அச்சிக்கல்களை சரிசெய்து வருவதாக சொன்னார்.

---------- 

ரமலான் மாதம் நோன்பு தொடங்கும் நாளை நிர்ணயிக்க, வரும் 28-ஆம் தேதி பிறைபார்க்கப்படுவதாக, அரச முத்திரை காப்பாளர் தெரிவித்துள்ளார்.

--------- 

நாடு முழுவதும் நேற்று மட்டும், 1,800-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன; அதில் 18 மரணங்கள் பதிவாகின. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us