Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

Kalakkal kaalai

You Asked! We Listened! Everything is new on the Kalakkal Kaalai plate! Kickstarts your weekday mornings with our sassy pair, Uthaya and Vikadakavi from 6 am to 10 am.

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பள்ளிகளின் ஒழுங்குமுறை கடுமையாக்கப்படும்!

Aug 12, 2024


பள்ளிகளின் ஒழுங்குமுறை கடுமையாக்கப்படும்!

பள்ளிகளில் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்கிலான ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் கல்வி அமைச்சு கடுமையாக இருக்கும்! 

அதே போல் இப்பிரச்னையைக் கட்டுப்படுத்த பெற்றோர் உள்ளிட்ட தரப்புகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, கல்வி அமைச்சர் கேட்டுக் கொண்டார். 

திரங்காணு பெசுட்டில், மாணவி ஒருவர் சக மாணவர்கள் மூவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக் காட்டி, அமைச்சர் அவ்வாறு கூறினார். 

மேலும், மின்னியல் சிகரட் அல்லது வேப், சிகரட் உள்ளிட்ட பழக்கங்களை மாணவர்களிடத்தில் கட்டுப்படுத்தவும் KPM தொடர்ந்து தீவிரம் காட்டும் என்றாரவர். 

--------- 

நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முன்னூற்று எழுபதாக உள்ளது.  

ஆகக் கடைசி தகவல்படி மலாக்கா, அலோர் காஜாவில் முன்னூற்று இரண்டு பேர் தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருக்கின்றனர். 

நெகிரி செம்பிலானின் ரெம்பாவ் மற்றும் போர்டிக்சனில் கிட்டத்தட்ட எழுபது பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பு நட்மா தெரிவித்துள்ளது. 

--------- 

கடந்த மாதம் சரிவு கண்ட காய்கறிகளின் விலை அடுத்த மாதம் வழக்கத்திற்குத் திரும்பும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது! 

பருவமழைக்காலத்தை ஒட்டி, அடுத்த மாதம் மழை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், அம்மாற்றத்தையும் எதிர்ப்பார்க்கலாம் என, கேமரன் மலை காய்கறி விவசாயிகள் சங்கம் தெரிவித்திருக்கின்றது. 

கடந்த மூன்று வாரங்களாக எதிர்ப்பார்த்த மழை இல்லாதது, அதிக வெப்பம் போன்ற சூழல் நிலவினாலும், நாட்டிற்கான ஐம்பது விழுக்காட்டு காய்கறிகளை விளைய வைப்பதில் தங்களுக்கு பெரிதாக சவால் ஏதும் ஏற்படவில்லை என அச்சங்கம் கூறியது. 

--------  

இதனிடையே மலாக்கா, Masjid Tanahவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா முன்னூரு ரிங்கிட் உதவித் தொகையை மாநில அரசு அறிவித்துள்ளது. 

தற்காலிக நிவாரண மையங்களில் பதிந்துக் கொண்டவர்களுக்கு அந்த உதவித் தொகை வழங்கப்படும் என, மாநில முதலமைச்சர் தெரிவித்தார். 

-------- 

சிலாங்கூர், செர்டாங் மருத்துவமனையில் ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்த 14 வயது சிறுமி, மாநில சுகாதாரத் துறையிடம் அனுப்பப்பட்டுள்ளார்! 

அச்சிறுமி வயது குறைந்தவள் என்பதால், மேல் நடவடிக்கையை அத்துறை எடுக்கும் என காவல் துறை கூறியது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us