← Back to list
பாதுகாப்பு வசதி மேம்படுத்தப்படும்!
Jul 30, 2024

கெடா, பெர்லிஸ் மற்றும் கிளந்தான் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் ! 
அதன் நோக்கத்திற்காக கூடுதலாக 10 கோடி ரிங்கிட்டை ஒதுக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். 
எல்லைகளில் பல்வேறு குற்றச்செயல்கள் ஏற்படுவதைத் தடுக்கும் மலேசியாவின் முயற்சி அதுவாகும் என Datuk Seri Anwar Ibrahim கூறினார்.
-----------  
ஜொகூர், Iskandar Puteri-யில் ஆறு வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவத்தின் நோக்கம், விசாரணை முடியும் வரை வெளியிடப்படாது என மாநில காவல் துறை தலைவர் M குமார் தெரிவித்தார்.  
விசாரணை எந்த தடையும் இல்லாமல் சுமூகமாக நடைபெற அது அவசியமாவதாக, அவர் கூறினார்.  
அச்சம்பவம் தொடர்பில் கைதான ஐந்தாவது சந்தேக நபர் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை தடுத்து வைக்கப்படுகிறார்.  
-----------   
சிலாங்கூர், செப்பாங்கில் பதின்ம வயது சிறுவன் கார் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அவனது தந்தையிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது!   
அச்சிறுவனுடன் காரில் அவனது இரு தம்பிகளும் இருந்த காட்சிகள் அடங்கிய காணொலி, சமூக ஊடகங்களில் பரவியது.
---------   
மலாக்காவில் இம்மாத தொடக்கத்தில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தம்மீது கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை சமய ஆசிரியர் ஒருவர்  மறுத்துள்ளார். 
-------  
நாடு முழுவதும் நேற்று மட்டும் 1,900-ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்ட வேளை, 23 மரணங்கள் பதிவானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather