Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மாமன்னரைச் சந்திக்க புறப்பட்டுள்ளார் பிரதமர்!

Aug 16, 2021


மாமன்னரைச் சந்திக்க புறப்பட்டுள்ளார் பிரதமர்!

நாட்டு மக்களின் கவனம் தற்போது Istana Negara பக்கம் திரும்பியுள்ளது!

பல்வேறு ஆருடங்களுக்கு மத்தியில் பிரதமர் Tan Sri Muhyiddin Yassin நண்பகல் வாக்கில் மாமன்னரைச் சந்திக்கவிருப்பதே அதற்குக் காரணம்.

அரண்மணையுடனான சந்திப்புக்குப் பிறகு பிரதமர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Putrajaya-வில் பிரதமர் தலைமையில் காலை 10 மணிக்கு தொடங்கிய சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பிரதமருக்கான ஆதரவை 15 UMNO நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டதை அடுத்து, அவரின் பெரும்பான்மை கேள்விக் குறியாகியது.

பெரும்பான்மை இழந்தவர் பதவி விலக வேண்டும் என UMNO-வும் எதிர்கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், இன்று இவ்விவகாரம் ஒரு முடிவுக்கு வரும் என பரவலாகக் கூறப்படுகிறது. 

----- 

இம்மாத இறுதிக்குள் 50 விழுக்காட்டுப் பெரியவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசியைப் போட்டு முடிக்கும் இலக்கில் மலேசியா சரியாக சென்று கொண்டிருக்கின்றது.

கடந்த மாதம் மட்டுமே 12 மில்லியன் தடுப்பூசிகள் கொடுத்து முடிக்கப்பட்டதன் அடிப்படையில், தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளரான Khairy Jamaluddin அவ்வாறு கூறியுள்ளார்.

கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள 100 விழுக்காட்டு பெரியவர்களுக்கு குறைந்தது ஒரு தடுப்பூசியைப் போடும் இலக்கையும் அடைய முடியும் என தாங்கள் நம்புவதாக Khairy சொன்னார்.

-----

நாட்டில் மொத்தம் 45.9 விழுக்காட்டுப் பெரியவர்கள் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இரு தடுப்பூசிகளையும் முழுமையாகப் போட்டு முடித்துள்ளனர்.

நேற்று மட்டும் நான்கு லட்சத்து 15 ஆயிரத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

------

வருகின்ற ஒன்றாம் தேதி பள்ளிகளைத் திறக்கும் முடிவை கல்வி அமைச்சு ஒத்தி வைத்துள்ளது.

அக்டோபர் மூன்றாம் தேதி தொடங்கி, பள்ளிகள் கட்டங்கட்டமாகத் திறக்கப்படும் என அமைச்சர்  Datuk Dr Radzi Jidin அறிவித்துள்ளார்.

முதல் கட்டமாக இவ்வாண்டு பொது தேர்வு எழுதவிருக்கும் ஐந்தாம் மற்றும் ஆறாம் படிவ மாணவர்கள் முதலில் பள்ளிக்குச் செல்வர்.

ஆனால், தேசிய மீட்சித் திட்டத்தின் முதல் கட்டத்தில் இருக்கும் பள்ளிகள் திறக்கப்படாது என்பதை அமைச்சர் தெளிவுப்படுத்தியிருக்கின்றார்.

----- 

கடந்த மாதம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்திற்குச் சென்றிருந்தவர்களில் மேலும் ஐவருக்கு கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து அக்கூட்டம் தொடர்பில் பதிவான சம்பவங்களின் எண்ணிக்கை 102ஆக உயர்ந்துள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather