← Back to list
அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
Jul 08, 2021
Perikatan Nasional அரசாங்கத்தின் நிலை ஆட்டம் கண்டிருக்கிறது!
தேசியக் கூட்டணிக்கான ஆதரவை தாங்கள் உடனடியாக மீட்டுக் கொள்வதாகவும், பிரதமர் Tan Sri Muhyiddin Yassin பதவி விலகி, இடைக்காலமாக ஒருவர் அப்பதவிக்கு வர வேண்டும் என்றும் அம்னோ தலைவர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi வலியுறுத்தியிருப்பதே அதற்கு காரணம்.

மக்களவையில் அம்னோவுக்கு 38 MPகள் உள்ளனர்; அவர்களில் சிலர் அமைச்சரவைப் பொறுப்பு வகிக்கின்றனர்.
ஒருவேளை, அவர்கள் அனைவரும் ஆதரவை விலக்கிக் கொண்டால், நடப்பு அரசாங்கம் கவிழும் நிலை ஏற்படலாம்.
என்றாலும், இதுவரை இவ்விவகாரத்தில், அம்னோவின் மூத்த அமைச்சர்கள் யாருமே தங்களது நிலைப்பாடு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

புதிதாக துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள Datuk Seri Ismail Sabri Yaakob, மூத்த அமைச்சராகியுள்ள Datuk Seri Hishammuddin Hussein ஆகியோரும் கூட, கட்சி முடிவுக் குறித்து இன்னும் கருத்துரைக்கவில்லை.

ஆனால், COVID-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில், தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பதவியையும், பொறுப்புகளையும் மிகப் பெரிய கடமையாக, ஏற்றுக் கொள்வதாக, அவ்விருவரும் தெரிவித்துள்ளனர்.
அவ்விருவரும் விரைவில் மௌனம் கலைத்து தங்களது கருத்தை தெரிவிப்பார்கள் என, அரசியல் ஆய்வாளர் Dr Oh Ei Sun, கூறுகின்றார்.
"These two leaders will have to make a decision as to whether they would like to stay on with this government and therefore enjoy the ministerial largesse, or they would like to follow their party and pull out of a coalition, perhaps forming a new ruling coalition”
தடுப்பூசி டோஸ்கள்: 10 மில்லியனை தாண்டின!
கடந்த பிப்ரவரியில், COVID-19 தேசிய தடுப்பூசி திட்டம் தொடங்கியதில் இருந்து நேற்று வரை போட்டு முடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 10 மில்லியனை தாண்டியிருக்கிறது.
அதில் ஏறக்குறைய 6 மில்லியனுக்கும் அதிகமானவை முதல் டோஸாகும்; எஞ்சிய 2ஆம் டோஸ்களாகும்.
நேற்று ஒரு நாளில் மட்டும், நாடு முழுவதும் 3 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டன.
ஒரே நாளில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.
உணவுக் கூடைகள் விநியோகிப்பு!
COVID-19 பெருந்தொற்று காலக்கட்டத்தில் உதவி தேவைப்படுவோருக்காக அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள உணவுக் கூடை உதவித் திட்டம் சுமூகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதற்கான நிதி ஜூலை ஒன்றாம் தேதி முதல் விநியோகிக்கப்பட்ட நிலையில், இதுவரை 4 லட்சத்து 38 ஆயிரத்திற்கும் அதிகமான உணவுக் கூடைகள் மக்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக நிதி அமைச்சு தெரிவித்தது.
அத்திட்டத்தின் கீழ், ஒவ்வோரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தலா 3 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏழு நாட்களாக கொரோனா சம்பவங்கள் அதிகரித்துள்ளன!
KL, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் Labuanனில், தினசரிப் பதிவாகும் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தப்பாடில்லை.
கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில், இவ்வாரம், அந்த 4 மாநிலங்களில், தினசரிப் பதிவான COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை சராசரியாக 2 புள்ளி 6 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்துள்ளார்.
இதே நிலை நீடித்தால், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் சுகாதார முறை வலுவிழந்துப் போகலாம் என்றும் அவர் சொன்னார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather