← Back to list
மேலும் 84 பேர் மரணம்!
Jun 24, 2021

நாட்டில் மேலும் 84 பேர் Covid-19 கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து மொத்த மரண எண்ணிக்கை நாலாயிரத்து 721 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக ஐயாயிரத்து 841 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சிலாங்கூரில் மிக அதிகமாக ஈராயிரத்து 72 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இதுவரை 18 லட்சத்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு முழுமையாக இரு தடுப்பூசி டோஸ்களும் போடப்பட்டுள்ளன.
47 லட்சத்துக்கும் அதிகமானோர் முதலாவது டோசைப் பெற்றுள்ளனர்.
KL, சிலாங்கூர், சரவாக்கில் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை கிட்டதட்ட 19 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் முதலாவது தடுப்பூசி டோசைப் பெற்றுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக் கொள்ள மேலும் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் பதிந்து கொண்டிருப்பதாக மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு கூறியது.

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்குத் தடுப்பூசி போட உதவும் சுகாதாரத் தன்னார்வலர்களுக்கும் செலவுபடித் தொகை அதிகரிக்கப்படவிருக்கிறது.
தன்னார்வ சுகாதாரப் பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு 100 ரிங்கிட் வழங்கப்படவிருப்பதாக நேற்று பிரதமர் கூறியிருந்தார்.

KL காவல் துறையினர் அங்கீகாரம் பெறப்படாத Covid-19 தடுப்பூசியைப் பொதுமக்களுக்கு விற்க முயன்ற மூவரைக் கைது செய்துள்ளனர்.
அவர்கள் இரு டோஸ்களை 420 ரிங்கிட்டுக்கு விற்க முனைந்ததும் தெரிய வந்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather