← Back to list
குடும்பத்தில் இருந்தே பரவும் COVID-19!
May 17, 2021
நாட்டில் COVID-19 தொற்றால் ஏற்படும் மரணங்களில் 80 விழுக்காட்டுக்கும் மேலானவை, வயதானவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட நாள்பட்ட நோய்கள் கொண்டவர்களை உட்படுத்தியிருக்கின்றது!
அவர்களில் பெரும்பாலானவர்கள், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து அத்தொற்றுக்கு ஆளானவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, COVID-19 தொற்றுக்கு ஆளாகக்கூடிய ஆபத்து அதிகம் உள்ளவர்களுடன் தங்கியிருப்பவர்கள், அப்பெருந்தொற்றில் இருந்து தங்களையும், தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சு அறிவுறுத்தியது.

இவ்வேளையில், நாட்டில் கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக சிலாங்கூர் திகழ்வதாக அமைச்சு தெரிவித்தது.
கடந்த இரு வாரங்களில் சிலாங்கூரில், 18 ஆயிரத்து 500க்கும் அதிகமான உள்ளூரில் பதிவான தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மற்றொரு நிலவரத்தில், COVID-19 தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, சிலாங்கூர் Sungai Buloh மருத்துவமனையில் சடலங்களை கிடத்தி வைப்பதற்காக பிரத்தியேக கொள்கலன் தயார் செய்யப்பட்டுள்ளது. 
கடந்த மே 9ஆம் தேதி தொடங்கி இதுவரை, 245 மரணங்கள் பதிவாகியிருப்பதை சுகாதார அமைச்சு சுட்டிக் காட்டியது.
 
வேறு வழிகள் ஆராயப்பட வேண்டும்!
COVID-19 பெருந்தொற்றை கையாளக் கூடிய வேறு வழி வகைகளை ஆராயுமாறு, மலேசிய மருத்துவச் சங்கம் MMA, சுகாதார அமைச்சை வலியுறுத்தியுள்ளது.
கொரோனா சம்பவங்கள் அதிகரித்துள்ள பகுதிகளில் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏற்பட்டுள்ள ஆள்பலப் பற்றாக்குறை விரைந்து தீர்க்கப்பட வேண்டும் என, அதன் தலைவர் பேராசிரியர் Datuk Dr M.Subramaniam, NSTயிடம் கூறியுள்ளார்.
COVID-19 தற்போது சமூகத்தில் தீவிரமாக பரவி வருவதால், இன்னும் சில வாரங்களில் அதன் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதனை கையாள, பணியிட நியமனத்திற்காக காத்திருக்கும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் உதவியாளர்களை, அமைச்சு பணி செய்ய அழைத்துக் கொள்ளலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
மருத்துவ முன்களப் பணியாளர்களின் பணிச் சுமையை குறைக்கும் விதமாக, எழுத்துப் பூர்வமாக மேற்கொள்ளப்படும் சில வேலைகள் இலக்கயியல் முறைக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
 
தனது கணவரை நேரில் சென்றுக் கண்ட பெண்ணுக்கு தண்டம்!
நோன்புப் பெருநாளின் முதல் நாள் கொண்டாட்டத்தின் போது, புத்ராஜெயாவில் சாலைத் தடுப்புச் சோதனைப் பணியில் ஈடுப்பட்டிருந்த, காவல் வீரரான தனது கணவரை நேரில் சென்று சந்தித்த பெண்ணுக்கு, SOP மீறலுக்காக ஈராயிரம் ரிங்கிட் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

தனது கணவருக்கு உணவுக் கொடுக்கவே அப்பெண் சென்றிருந்தாலும், இதே காரணத்தை காட்டி இன்னும் பலர் SOP-களை மீறி செயல்பட்டு விடக் கூடாது என்பதற்காக அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாவட்ட காவல் துறை தலைவர் கூறியுள்ளார்.
முன்னதாக, அப்பெண் தனது மூன்று பிள்ளைகளுடன் கணவரை நேரில் சென்று சந்தித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
 
தினசரி கொரோனா நிலவரம்....
நாட்டில் COVID-19 தினசரி சம்பவங்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
ஆகக் கடைசியாக மூவாயிரத்து 780 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.
அதில் ஆயிரத்து 275 சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவானவை; மரண எண்ணிக்கை 36 ஆகப் பதிவானது.
 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather