← Back to list
MCO பகுதிகளில் சாலை தடுப்புகள் பலப்படுத்தப்படும்- காவல் துறை !
May 08, 2021
 

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வந்திருப்பதை அடுத்து காவல் துறை சிலாங்கூர் மற்றும் KL-லில் சாலை தடுப்புச் சோதனைகளைக் கடுமையாக்குகின்றது!
KLலில் மட்டும் சுமார் ஒன்பது தடுப்புச் சோதனைகளைப் போட இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக சிலாங்கூர் மாநில காவல் துறை தலைவர் Datuk Arjunaidi Mohamed ப்தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அல்லாமல், டோல் சாவடிகள் எல்லைகளுக்கு அருகிலுள்ள சாலைகளிலும் சாலை தடுப்பு போடப்படும் என்றாரவர்.
நாட்டில் Covid-19 சம்பவங்கள் மீண்டும் மோசமடைந்து வருவதை அடுத்து, இந்த MCO காலகட்டத்தில் மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுகின்றது.
----- 
நாட்டில் நேற்று நாலாயிரத்து 498 Covid-19 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.
அதிலும் சிலாங்கூரில் தொடர்ந்து மிக அதிகமாக ஆயிரத்து 424 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் 22 பேர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருப்பதால் மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 632 ஆக அதிகரித்துள்ளது.
----- 
Covid-19 தொற்று காரணமாக மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று ஒரே நாளில் 500ருக்கும் மேற்பட்ட நோயாளிகள் சேர்க்கப்பட்டனர்.
இது இவ்வாண்டின் ஆக அதிகமான எண்ணிக்கை என சுகாதரத் துறை தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-----
நோன்பு பெருநாளின் போது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் உள்ள பகுதிகளில் மாவட்ட எல்லைகளைக் கடக்க தடை விதிக்கப்படுகின்றது.
நோன்பு பெருநாளைக் கொண்டாடுபவர்கள் அதனை தங்கள் மாவட்டங்களுக்குள் மட்டுமே கொண்டாட அனுமதி வழங்கப்படுவதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Utusan Malaysiaவிடம் தெரிவித்துள்ளார்.
நோன்பு பெருநாளின் போது, குறிப்பாக முதல் நாளன்று, கண்காணிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஏதுவாக, மாவட்ட எல்லைகளில் சாலை தடுப்புச் சோதனைகள் போடப்படும் என்றாரவர்.
----- 
நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி கழகங்களைச் சேர்ந்த சுமார் 70 ஆயிரம் மாணவர்கள் நேற்று தொடங்கி கட்டங்கட்டமாக சொந்த ஊர் திரும்புகின்றனர்.
சரவாக்கைத் தவிர்த்து இதர மாநிலங்களைச் சேர்ந்த உயர்கல்வி கழக மாணவர்கள் நோன்பு பெருநாளுக்காக மே 7 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை சொந்த ஊருக்குத் திரும்ப அனுமதி வழங்கப்பட்டது.
----- 
சுபாங் விமான நிலைய காவல் நிலையத்தில்,  கடந்த April 30ஆம் தேதி தொடங்கி நேற்று வரை ஆகாய மார்க்கமாக மாநில எல்லைகளைக் கடக்க முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்களில் 500க்கும் அதிகமானவை நிராகரிக்கப்பட்டுள்ளன.
அவ்விண்ணப்பங்கள் அனைத்தும் முறையான காரணங்களைக் குறிப்பிடாததால் நிராகரிக்கப்பட்டதாக மாவட்ட காவல் துறை தலைவர் தெரிவித்தார்.
இப்போதைக்கு குடும்ப உறுப்பினர்களின் இறப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மட்டுமே மாநில எல்லையைக் கடக்க அனுமதி வழங்கப்படுவதை அவர் சுட்டிக் காட்டினார்.
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather