← Back to list
AstraZeneca தொடர்ந்து பயன்படுத்தப்படும்!
Apr 06, 2021

நாட்டில் புதிதாக ஆயிரத்து 300 பேருக்கு Covid-19 கிருமித் தொற்று பீடித்திருக்கிறது.
சரவாக்கில் மிக அதிகமாக முந்நூறுக்கும் அதிகமான சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சிலாங்கூர், கிளந்தான், பினாங்கு ஆகிய மாநிலங்களிலும் அதிகமான சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் ஐவர் உயிரிழந்திருப்பதை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது.
 
Covid-19 தேசியத் தடுப்பூசித் திட்டத்தில் AstraZeneca தடுப்பூசி தொடர்ந்து பயன்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
தடுப்பூசி பெறுவதற்கான உத்தரவாத சிறப்பு செயற்குழு கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் Datuk Seri Dr Adham Baba தெரிவித்தார். 
அத்தடுப்பூசியால் பக்க விளைவுகளைக் காட்டிலும் அதிக நன்மைகள் இருப்பதை மருத்துவத் தரவுகள் காட்டுவதாக அவர் சொன்னார்.   
AstraZeneca தடுப்பூசியைப் பயன்படுத்துவது குறித்து தடுப்பூசி பெறுவதற்கான உத்தரவாத சிறப்பு செயற்குழு முடிவு செய்யும் என முன்னதாக அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Covid-19 தடுப்பூசி தொடர்பில் பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் அடையாளம் காணப்பட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை  பாயும் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. 
தேசிய தடுப்பூசித் திட்டம் குறித்து கொடுக்கப்படும் தவறான தகவல்கள் பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர் குலைக்கும் என அது சுட்டிக் காட்டியது. 
Covid-19 தடுப்பூசி போட்டுக் கொண்டதால் சிலர் மரணமடைந்ததாக அண்மையில் சில பொய்ச் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
Covid-19னுக்கான தர செயல்பாட்டு நடைமுறைகளை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 95 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலானோர் அனுமதியில்லாமல் மாநில எல்லைகளைக் கடக்க முயன்றவர்கள் என தற்காப்பு அமைச்சு கூறியது.
 
தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு சுமூகமாக நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மொத்தம் 234 தொகுதிகளில் வாக்களிப்பு நடைபெறுகிறது.
இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணி வரையிலான நிலவரப்படி தமிழகத்தில் சுமார் 47 வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஆட்சிமைக்க ஒரு கட்சிக்கு குறைந்தது 118 தொகுதிகள் தேவை.
மே 2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather