← Back to list
உணவகங்களில் புகைப் பிடிக்க விதிக்கப்பட்ட தடை மீட்டுக் கொள்ளப்படாது!
Jan 10, 2019
உணவகங்களில் புகைப் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது , விதிக்கப்பட்டது தான்!
சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஒற்றைக் காலில் நின்றாலும், அரசாங்கம் தனது முடிவில் இருந்து பின் வாங்காது என சுகாதார அமைச்சர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
சிகரெட் பிடிப்பவர்களின் உரிமைகள் முக்கியம் என்றால், சிகரெட் பிடிக்காமல் புகையை நுகர்வதால் பாதிக்கப்படும் பொதுமக்களின் உரிமைகளை யார் பாதுகாப்பது என அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ஃளி அஹ்மாட் எதிர்கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தால், எதிர்ப்புக்கு பயந்து அரசாங்கம் முடிவை மாற்றிக் கொள்ளுமென அவர்கள் நினைத்தால், அது தவறு என்றார் அவர்.
அதே சமயம், சிலர் கேட்பது போல், இரவு 10 மணிக்கு மேல் அதாவது உணவுக் கடைகளில் கூட்டம் குறைந்து காணப்படும் நேரத்தில் புகைப் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்கும் பேச்சுக்கே இடமில்லை.
நேரம் பார்த்து தடை விதிப்பதற்கு, தடையை விதிக்காமலேயே இருக்கலாம் என அவர் சொன்னார்.
இவ்வேளையில், பிப்ரவரி முதல் தேதி தொடங்கி Sabah-விலும் அவ்விதிமுறை அமுல்படுத்தப்படுமென மாநில அரசு அறிவித்திருக்கிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather