← Back to list
கவனமாகக் கையாளப்பட வேண்டிய விவகாரம் !
Feb 11, 2026

அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட வழிபாட்டுத் தளங்கள் விவகாரம் கவனமாகக் கையாளப்பட வேண்டும்!
பொது அமைதியை சீர்குலைக்கா வகையில், சட்டப்பூர்வமாகவே நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, எடுத்த எடுப்பில் செயல்பட்டுவிட முடியாது என, பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எல்லா வழிபாட்டுத் தளங்களுமே சட்டதிட்டங்களுக்கும், ஊராட்சி மன்றங்களின் கட்டுப்பாடுகளுக்கும் இணங்கவே கட்டப்பட வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.
அண்மைய காலமாக நாட்டில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட வழிபாட்டுத் தளங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விவகாரம் தலைதூக்கியிருக்கிறது.
--
இவ்வாண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை, நாட்டில் ஈராயிரத்து ஐநூருக்கும் மேற்பட்ட காசநோய் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன!
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் பதிவான எண்ணிக்கையை விட இது 9.8 விழுக்காடு அதிகம் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிலாங்கூரில் ஆக அதிகமாக 13 cluster சம்பவங்கள் பதிவாகின.
--
2025 ஊழல் புலனுணர்வு குறியீட்டில் மலேசியா தனது இடத்தை மேம்படுத்திக் கொண்டுள்ளது!
2024கில் அக்குறியீட்டில் 57ஆம் இடத்தில் இருந்த மலேசியா கடந்தாண்டு 54ஆம் இடத்துக்கு முன்னேறியது.
--
சிலாங்கூர், ஷா ஆலாம் டோல் சாவடியில் கோனை வீசி அடாவடி செய்த ஆடவர், இன்று நீதிமன்றத்துக்குக் கொண்டுச் செல்லப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது!
35 வயதான அந்த மலேசியர் நேற்று காவல் துறையில் சரணடைந்தார்.
வெளிநாட்டவர் ஒருவரிடம் அவர் டோல் சாவடியில் கடிந்துக் கொள்ளுங்கள் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் பரவியது.
--
சிலாங்கூர், Kajangகில் வயதானவரை அடித்துத் தாக்கிய 52 வயது நபருக்கு ஐயாயிரத்து ஐநூரு ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது!
--
கொலொம்பியாவில் பெய்த தொடர் கனமழையால் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளத்தால் ஏராளமானோர் தங்கள் வீடுகளை இழந்துத் தவிப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் கூறுகின்றன.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather