← Back to list
150 ரிங்கிட்டைப் பெற்றோர்களே பெற முடியும் !
Jan 06, 2026

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 150 ரிங்கிட் ஆரம்பக் கல்வி உதவித்தொகையைப் பெற பெற்றோர்கள் நேரில் செல்ல வேண்டும் !
அது, பிள்ளைகள் பள்ளிகளில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆசிரியர்களிடம் கலந்துப் பேசவும் வகைச் செய்யும் என பிரதமர் கூறினார்.
மேலும், அப்பணம் பள்ளிச் செல்லும் பிள்ளைகளுக்காகச் செலவிடப்படுவதை உறுதி செய்யும் என்றார் அவர்.
2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், அரசாங்கம் அந்த உதவித் தொகைக்காக 800 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
--
இவ்வாண்டு மாரா இளங்கலை அறிவியல் கல்லூரியின் சேர்க்கைக்கு ஒரு லட்சத்துக்கும்அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
ஆனால், 7,000 பேர் மட்டுமே வெற்றிகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக, MRSM சொன்னது.
--
பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் நிறுவன சீர் திருத்தங்கள் விரைவில் தொடங்கப்படும் !!
அவ்வாறு நடப்பு சட்ட துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் தெரிவித்துள்ளார்.
சட்ட சீர்த்திருத்த அமைச்சர், மற்றும் அரசு வழக்கறிஞரின் வேலைகளைப் பிரிப்பதும் அதில் அடங்கும் என அவர் சொன்னார்.
--
பேராக்கில் வேப் மற்றும் மின்னியல் சிகரெட் வியாபாரிகளுக்கு அக்டோபர் வரை, செயல்பாடுகளை நிறுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அம்மாநிலத்தில் வேப் மற்றும் மின்னியல் சிகரெட்டுகளின் விற்பனைக்கு மாநில அரசு தடை விதித்தது.
--
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather