← Back to list
வெள்ளம் வடிய தொடங்கிவிட்டது !
Dec 20, 2025

நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, பத்தாயிரமாகக் குறைந்துள்ளது !
பஹாங்கில் ஒன்பதாயிரத்து 600 பேர், PPS துயர்துடைப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
திரங்கானுவில் 500 பேரும், ஜொகூரில் 300 பேரும், கிளாந்தானில் 70 பேரும், அம்மையங்களில் இருக்கின்றனர்.
-----------
நெடுஞ்சாலை பயனர்களுக்கு, தரமான மற்றும் சீரான சேவைகள் வழங்கப்படும் என மலேசிய நெடுஞ்சாலை வாரியம் உத்தரவாதம் அளித்துள்ளது !
R&R, ஓய்வெடுக்கும் இடங்களும் மேம்படுத்தித் தரப்படும் என அது சொன்னது.
அடுத்தாண்டு, 10 முக்கிய நெடுஞ்சாலைகளில், டோல் கட்டணம் உயர்த்தப்படாது என அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்ததை, அது மேற்கோள்காட்டியது.
----------
Negeri Sembilan Rembau-வில், பையில் அடைத்து புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லையென காவல்துறை தெரிவித்துள்ளது !
அப்பெண்ணின் உடல் நிலையைப் பார்க்கும்போது, அவர் இறந்து மூன்று நாட்களுக்கும் மேல் ஆகியிருப்பதாக தெரிகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.
------------
பினாங்கு Seberang Perai-யில், பெண்ணும் அவரது வளர்ப்புக் குழந்தையும் கொன்றை கொடிய தீ விபத்தில் இருந்து தப்பிய ஆடவர் ஒருவர், ஒரு வாரத்திற்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather