Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

வெள்ளத்தால் நாடு மீண்டும் பாதிப்பு !

Dec 17, 2025


வெள்ளத்தால் நாடு மீண்டும் பாதிப்பு !

 

நாட்டில் மீண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது ! 

மஹாங்கில் மட்டும் நான்காயிரத்துக்கும் அதிகமானோர், வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். 

திடீர் வெள்ளம் காரணமாக, Kuantan–Pekan-க்கு இடையிலான பாதையும் மூடப்பட்டுள்ளது. 

குவாந்தான், பெக்கான் மற்றும் ரொம்பினில், நாளை வரை மோசமான தொடர்மழை பெய்யலாம் என Met Malaysia தெரிவித்துள்ளது. 

இவ்வேளையில், ஜொகூரில் 240 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேளை, திரங்கானுவில் 100-க்கும் அதிகமானோர், PPS மையங்களில் அடைக்கலம் பெற்றுள்ளனர். 

---------   

இதனிடையே, கெடா, பெர்லிஸ், சபா, சர்வாக் மற்றும் லபுவானில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ! 

அம்மநிலங்களில் இன்றிரவு 7 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என Met Malaysia கணித்துள்ளது.

------------   

ஆண்டிறுதி விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, PLUS நெடுஞ்சாலைகளில் ஒரு நாளைக்கு 22 லட்சம் வாகனங்கள் பயணிக்கலாம் ! 

இவ்வார வெள்ளிக்கிழமை தொடங்கி, வாகனங்களின் எண்ணிக்கை உயரலாம் என PLUS சொன்னது.

---------- 

புதிய அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் பதவியேற்ற நிகழ்வுக்குப் பிறகு, பிரதமர் Datuk Seri Anwar Ibrahim, முதல் அமைச்சரவை கூட்டத்தை நடத்தியுள்ளார் ! 

இன்று காலை மாட்சிமை தங்கிய மாமன்னர் Sultan Ibrahim முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டவர்களில்,  மனிதவள அமைச்சராக பதவியேற்ற டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனும், தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சராக பதவியேற்ற யுனேஸ்வரனும் அடங்குவர். 

---------  

ஆஸ்திரேலியா போண்டாய் கடற்கரையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில், காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட, ஹைதராபாத்தைச் சேர்ந்த நபரின் தீவிரவாத சிந்தனை குறித்து, அவரது குடும்பத்தினர் அறியவில்லை என இந்திய காவல்துறை தெரிவித்துள்ளது ! 

முன்னதாக அந்நபர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்றும், இந்திய கடப்பிதழை வைத்திருந்ததாகவும், காவல்துறை கூறியிருந்தது. 

இவ்வேளையில், அந்நபருடன் அத்தாக்குதலை சேர்த்து நடத்திய அவரது 24 வயது மகன் மீது, 15 கொலைக் குற்றச்சாட்டுகள் உட்பட, கிட்டத்தட்ட 60 குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன !  

அச்சம்பவத்தில், குறைந்தது 15 பேர் கொல்லப்பட்ட வேளை, பலர் காயமடைந்தனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us