Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

அவதூறு கூறுவதைச் சகித்துக் கொள்ளாது காவல் துறை !

Dec 13, 2025


அவதூறு கூறுவதைச் சகித்துக் கொள்ளாது காவல் துறை !

மலாக்காவில், ஆம்புலன்ஸைத் தடுத்து போக்குவரத்து அதிகாரிகள் வாகனத் தொடரணிக்கு வழிவிடுவதாகக் காட்டப்படும் காணொலி தொடர்பில், காவல்துறை விரைவில் விசாரணைச் செய்யும்! 

கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த அச்சம்பவத்தின் போது, போக்குவரத்து அதிகாரிகள் ஆம்புலன்ஸைத் தடுக்கவில்லை என்றும், வாகனத் தொடரணியை வழி நடத்தியதாகவும் மாநில காவல் துறை விளக்கமளித்துள்ளது. 

மேலும், காவல் துறைக்கு கலங்கம் விளைவிக்கும் எந்தவொரு செயலும் சகித்துக் கொள்ள முடியாது என அத்துறை எச்சரித்துள்ளது. 

-- 

இதனிடையே, டுரியான் துங்காலில், அண்மையில் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று சந்தேக நபர்களில் ஒருவரின் மனைவி என கூறிய பெண்ணின் புகார் உண்மை இல்லை என மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. 

அச்சந்தேக நபரின் உண்மையான மனைவி ஜொகூரில் இருப்பதாகவும், அவர் மீது 10 குற்ற பதிவுகள் உள்ளதாகவும் அத்துறை சொன்னது. 

கடந்த நவம்பர் 24 அன்று மலாக்காவில் போலிசாரால்  மூன்று ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

-- 

சிலாங்கூரில், அடுத்த ஆண்டு தொடங்கி, ஆங்காங்கே குப்பைகளை கொட்டும் பிரச்சினையைக் கையாள அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். 

திறந்த வெளியில் குப்பைப் போடுபவர்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் சமூக சேவைச் செய்வது தண்டனையாக விதிக்கப்படுவது குறித்து சம்மந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்து பேசி வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. 

-- 

நெகெரி செம்பிலான், Kuala Pilah- வில் நேற்று petai பறிக்கச் சென்ற 47 வயது ஆடவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானர். 

அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்; அச்சம்பவம் குறித்து காவல் துறை விசாரித்து வருகிறது. 

-- 

கெடாவில், சட்ட விரோத எண்களை விற்கும் வணிக வளாகங்களுக்கு, உரிமம் வழங்கவோ புதுப்பிக்கவோ கூடாது எனும் மாநில அரசின் முடிவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us