Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பிரதமர் தனது முடிவில் உறுதி !

Nov 13, 2025


பிரதமர் தனது முடிவில் உறுதி !

 

சபாவின் வருவாய் உரிமை தொடர்பான கோட்டா கினபாலு உயர் நீதிமன்ற தீர்ப்பில், சட்ட எல்லையை மீறிய காரணங்களுக்கு மட்டுமே, கூட்டரசாங்கம் மேல்முறையீடு செய்யும் என பிரதமர் தெரிவித்துள்ளார் ! 

கூட்டரசு, மாநில அரசாங்கங்கள், சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு, சபா மீதான தங்கள் பொறுப்பை புறக்கணித்ததையே இந்த தீர்ப்பு உணர்த்துவதாக, Datuk Seri Anwar Ibrahim கூறினார். 

சபாவுக்கான 40 விழுக்காட்டு வருவாய் உரிமைக்கு எதிராக அரசாங்கம் மேல்முறையீடு செய்யாது என்றும் பிரதமர் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி தெளிவுப்படுத்தினார்.  

---------- 

நேற்றிரவு சிலாங்கூர் கிள்ளான் பெட்ரோல் நிலையத்தில் நிகழ்ந்த வைரலான சம்பவம், துப்பாக்கிச் சூடு சம்பவம் அல்ல ! 

தப்பிக்க முயன்றபோது, ஆக்ரோஷமாக செயல்பட்ட ஒரு கொள்ளையன் என நம்பப்படும் நபரை, கைது செய்ய காவல்துறை மேற்கொண்ட முயற்சி இதுவே என மாவட்ட காவல்துறை தலைவர் தெளிவுபடுத்தினர்.  

பின்னர் அச்சந்தேக நபர் கைதாகி,  கொலை முயற்சி உள்ளிட்ட கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறார். 

---------- 

அடுத்தாண்டு தொடக்கத்தில், மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிப்பதா இல்லையா என்பது குறித்து, அரசாங்கம் ஓர் ஆழமான ஆய்வை மேற்கொள்ளும் ! 

சட்ட, சீர்திருத்த துணை அமைச்சர் M. குலசேகரன் அவ்வாறு தெரிவித்துள்ளார். 

2018-இல் கட்டாய மரண தண்டனைகளுக்கு, தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. 

பின்னர், அது 2023-இல் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது. 

--------- 

மலேசியா - தாய்லாந்து எல்லை பகுதியில், படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 26 பேரில், 9 பேரின் பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன ! 

கடந்த வார இறுதியில், மியன்மாரில் இருந்து 90 சட்டவிரோத குடியேறிகளை ஏற்றி வந்த படகு, மலேசிய கடற்பரப்பை நெருங்கும்போது மூழ்கி விபத்துக்குள்ளானது. 

-------- 

இந்தியா டில்லி பயங்கரவாத கார் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, காவல்துறை, ஜம்மு காஷ்மீரில் 3-ஆவது நாளாக பயங்கரவாதிகளை வலை வீசி தேடி வருகின்றது ! 

அச்சம்பவம் தொடர்பில் கைதான மூன்று மருத்துவர்களுக்கு, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளதை அடுத்து, அத்துறை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 

அவர்கள் இருந்த இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும், வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த அச்சம்பவத்தில், 10-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us