← Back to list
மின் வணிக குற்றச் சம்பவங்கள் கவலையளிக்கிறது !
Nov 10, 2025

நாட்டில் மின் வணிக குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன !
இவ்வாண்டு தொடங்கி, கடந்த மாதம் வரை, 12-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் வணிக குற்றச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.
இது, கடந்தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 97 விழுக்காடு அதிகமாகும்.
---------
அமைச்சரவை மாற்றம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ செய்தியும் தனக்குக் கிடைக்கவில்லை என, Amanah தலைவர் Datuk Seri Mohamad Sabu தெரிவித்துள்ளார் !
ஆயினும் ,நாளை அனைத்து அமைச்சர்களுக்கும் பிரதமர் ஒரு விளக்கத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
---------
சமூக ஊடகங்களில் விற்பனையாகும், சருமத்தை ஒளிரச் செய்யும் மருந்தை உண்டு, பெண் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், சுகாதாரத் அமைச்சு விசாரனை அறிக்கையைத் திறந்துள்ளது !
அம்மருந்தில், தடைசெய்யப்பட்ட பொருள் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
---------
கோலாலம்பூர் Taman Sri Sentosa-வில், ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நிர்வாணமாக நுழைந்து, மிரட்டி பணம் கேட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார் !
----------
தாய்லாந்து காவல் வீரர் என தன்னை அடையாளங்காட்டிக் கொண்டு, ஒருவரிடம் 3.3 மில்லியன் Baht பணம் பறித்த மலேசிய நபர், அந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather