Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பிரதமருடன் தீபாவளி !

Oct 18, 2025


பிரதமருடன் தீபாவளி !

 

மடானி அரசாங்கத்தின் ஏற்பாட்டிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு KL Sentralலில் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!

பொதுமக்களும் கலந்து அனுமதிக்கப்பட்டுள்ள இந்நிகழ்வில் இன்னும் சிறிது நேரத்தில் பிரதமரும் கலந்துக் கொள்ளவிருக்கிறார். 

அந்நிகழ்வின் தற்போதைய சூழல் குறித்த தகவல்களை அங்கிருந்து நமக்காக வழங்குகிறார், நமது நிருபர் கிஷேந்திரன் முணியாண்டி... 

பிரதமர் 12 மணியளவில் அங்கு வர அட்டவணையிடப்பட்டுள்ளது. 

------ 

தீபாவளி விடுமுறையை ஒட்டி, நேற்று தொடங்கி ஆறு நாட்களுக்கு, கிழக்குக்கரை நெடுஞ்சாலையை நான்கு லட்சத்து பத்தாயிரம் வாகனங்கள் பயன்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது! 

அதில் திங்கட்கிழமை தீபாவளி அன்று, உச்ச நேரத்தில் 95 ஆயிரம் வாகனங்களை சாலைகளில் எதிர்ப்பார்க்கலாம் என, பொதுப்பணி செயற்குழு தலைவர் தெரிவித்தார். 

அண்மைய போக்குவரத்து தகவல்களுக்கு Astro Audio Traffic சமூக ஊடகங்களை வலம் வரலாம். 

------ 

இதனிடையே மலாக்காவில் தீபத் திருநாளை ஒட்டி, ஆயிரம் இந்திய குடும்பங்களுக்கு இரண்டு லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டிலான உதவித் தொகை வழங்கப்படுகிறது! 

அவர்களின் தீபாவளி கொண்டாட்டத்தை சிறப்புச் செய்யும் விதமாக அந்த உதவித் தொகை அமையும் என எதிர்ப்பார்ப்பதாக, மாநில முதலமைச்சர் தெரிவித்தார். 

மேலும் மாநில தீபாவளி சந்தையில் வணிகம் செய்ய, 40 உள்ளூர் வணிகர்களுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர். 

 

------  

பள்ளிகளில் அரச மலேசிய காவல் படை ரோந்து பணிகளை அதிகரிக்கவிருக்கிறது! 

கல்வி, தடுப்பு மற்றும் அமுலாக்க அம்சங்களில், பள்ளிகளின் பாதுகாப்பை, குறிப்பாக மாணவர்களின் இலக்கவியல் பாதுகாப்பை உறுதிச் செய்ய அவ்வாறு செய்யப்படுகிறது. 

16 வயதுக்குக் கீழ்ப்பட்ட மாணவர்களுக்குக் கைப்பேசி பயன்பாட்டைத் தடைச் செய்வதும், அந்த பாதுகாப்புக் கொள்கைகளில் ஒன்று என, உள்துறை அமைச்சர் தெரிவித்தார். 

------  

வெள்ள நிலவரத்தில் மாற்றமில்லை! 

ஆகக் கடைசி தகவல்படி மலாக்காவிக் 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கெடாவில் 158 பேரும், சரவாக்கில் 97 பேரும் தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us