Inilah Kita Banner
Inilah Kita Banner
Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தானாகவே வந்து சரணடையுங்கள் !

Sep 13, 2025


தானாகவே வந்து சரணடையுங்கள் !

 

உள்நாட்டு வருவாய் வாரியம், அனைத்து வரிவிதிப்பாளர்களும் தங்களின் வரி தகவல்களில் உள்ள தவறுகளை தன்னார்வமாக வெளியிட வேண்டுமென தெரிவித்துள்ளது ! 

தணிக்கைகள் அல்லது விசாரணைகள் மூலம் கண்டறியப்படும் போது விதிக்கப்படும் கடுமையான அபராதங்களைத் தவிர்க்க, அது உதவும். 

கடந்தாண்டு தொடக்கம் முதல் இவ்வாண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை, பல்வேறு துறைகளில் வரி மீறலைக் கண்டறிய, விரிவான வரி ஆபத்து பகுப்பாய்வு நடத்தப்பட்டது.  

அக்காலகட்டத்தில், 15 பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட கூடுதல் வரி பொறுப்புகளைக் கொண்ட, மொத்தம் 1,033 நிறுவனங்களையும், கிட்டத்தட்ட 2 பில்லியன் ரிங்கிட் கூடுதல் வரிகளைக் கொண்ட, 321 நபர்களையும் LHDN அடையாளம் கண்டுள்ளது.  

தணிக்கைக்கு முன் தன்னார்வமாக தகவல் வெளியிடும் வரிவிதிப்பாளர்களுக்கு, 15 விழுக்காட்டு அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என அது சொன்னது.  

---------- 

இலக்கவியல் முறையில், இயக்கப்படும் போதைப்பொருள் கும்பல்களைச் சமாளிக்க, ஆபத்தான போதைப்பொருள் சட்டம் புதுப்பிக்கப்பட வேண்டும் என போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது !  

தற்போது, போதைப்பொருள் கடத்தலாளர்கள், மறைமுக தகவல்தொடர்புகள், மற்றும் ரகசிய இணைய விற்பனை தளங்களை பயன்படுத்தி, தங்கள் அடையாளத்தை மறைத்து, நாடுகள் கடந்து செயல்படுவதாக அவர் சொன்னார்.  

அதனால், சட்டத்தை நவீன சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி, இணைய போதைப்பொருள் குற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் வலுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.  

----------- 

சபாவில், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும், வானிலை எச்சரிக்கைகளுக்கு எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என, துணைப் பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi கேட்டுக்கொண்டுள்ளார் !  

அதிகாரிகள் உத்தரவிடும் போது, குடியிருப்புவாசிகள் உடனடியாக தங்களின் வீட்டை விட்டு வெளியேறும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.  

--------- 

இதனிடையே, அம்மாநிலத்தில் வெள்ளத்தால் கிட்டத்தட்ட 400 பேர் பாதிக்கப்பட்டு, துயர்துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியிருக்கின்றனர் ! 

---------- 

நேப்பாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதை அடுத்து, அடுத்தாண்டு மார்ச் 5-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது !  

ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் அந்நாட்டை உலுக்கியதை அடுத்து, பிரதமரும், அமைச்சர்களும் பதவி விலகிக்கொண்டனர்.  


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us