← Back to list
பள்ளிகளில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படும் !
Aug 27, 2025

பள்ளிகளில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது, கல்வி அமைச்சு !
தொடர்ச்சியாக மாணவர்கள் சிலர், தங்கும் விடுதிகள் கொண்ட பள்ளிகளில் தவறி விழும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருப்பதே அதற்கு காரணம்.
அதனை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்பு சோதனகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அச்சோதனகளை நடத்தும் ஆய்வாளார்கள் வாராந்திர அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
அவ்வறிக்கைகளை மதிப்பாய்வு செய்த பின்னரே, பிரச்சனைகளை களைவதற்கான நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும்.
நிலைமையை நுணுக்கமாக கண்காணிக்க திடீர் சோதனகளை மேற்கொள்ளவும் அமைச்சு மாநில மற்றும் மாவட்ட கல்வித் துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
---------
இதனிடையே சிலாங்கூரில், பள்ளி தங்கும் விடுதி் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து மூன்றாம் படிவ மாணவர் விழுந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கல்வி அமைச்சு விசாரித்து வருகிறது.
அச்சம்பவத்தில் பகடி வதை அம்சங்கள் இருக்கின்றனவா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது
-------
இவ்வாண்டில் இதுவரை மலேசியர்கள், இணைய மோசடிகளில் 1.5 பில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளனர்.
அதன் தொடர்பில், கிட்டத்தட்ட பண்ணிரண்டாயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
------
ஜொகூர், பாசிர் கூடாங் மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளர்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது சுகாதார அமைச்சு !
அப்பதிய மருத்துவமனையில், போதுமான மருத்துவ பணியாளர்களை நியமிப்பதில் சவால்களை எதிர்கொண்டாலும், 2026 மத்தியில், அது முழுமையாக செயல்பட தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
---------
சபா Segama ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்டது என நம்பப்படும் வெடிகுண்டு பாதுகாப்பாக தகர்க்கப்பட்டது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather