← Back to list
இந்தியர்கள் நலனுக்காக ரமணன் !
Aug 21, 2025

இந்திய சமூதாயத்தினரின், விவகாரங்களைக் கவனித்துக்கொள்ள, PKR துணைத் தலைவரும் சிலாங்கூர் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை, அது குறித்த கடிதத்தை பிரதமர் துறையிடம் இருந்து தாம் பெற்றுக்கொண்டதை, ரமணன் பெர்னாமாவிடம் உறுதிப்படுத்தினார்.
அதில், இந்திய வர்கத்தினத்தினரின் பொருளாதார வளர்ச்சிக்குப் பல புதிய முயற்சிகளை கொண்டு வரும் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கையாக, பிரதமர் துறை மற்றும் கல்வி அமைச்சுடன் இணைந்து, கலந்து பேசவிருப்பதாகவும் ரமணன் தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளிகள் மற்றும் கோவில்களை உட்படுத்திய திட்டங்களை ஒழுங்குப்படுத்தி கண்காணிக்கும் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளில் அடங்கும்.
டிசம்பர் 2023 இல் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டதிலிருந்து, இந்திய தொழில்முனைவோர் சமூகத்தை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்காக ரமணன் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு KUSKOP மூலம் பல முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.
--------
மலேசியர்கள் இன்று தொடங்கி SARA உதவித் தொகைக்கான தங்களின் தகுதியை சரிபார்த்துக் கொள்ளலாம்.
நிதி அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத் தளமான SARA.GOV.MY இல் அவ்வாறு செய்யலாம் என அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த உதவித் தொகை MyKad பதிவுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், உதவி பெற மக்கள் பதிவு செய்ய வேண்டியதில்லை என்பதையும் அமைச்சு நினைவூட்டியது.
ஆகஸ்ட் 31 முதல் வழங்கப்படும் 100 ரிங்கிட் சிறப்பு உதவி தொகைக்கு 22 மில்லியன் மலேசியர்கள் தகுதி பெறுவார்கள் என பிரதமர் முன்னதாகக் கூறியிருந்தார்.
-------
முதல் முறையாக, வேலையிடங்களில் பகடிவதைையைத் தடுக்கும் முயற்சியில், அதற்கான வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தியுள்ளது சுகாதார அமைச்சு!
வேலையிடங்களில் நிகழும் பகடிவதைச் சம்பவங்களை புகாரளிக்கும் வழிகள், விசாரணை நடத்துவதற்கான நெறி முறைகள் ஆகியவை அதில் பட்டியலிடப்பட்டிருக்கும்.
மேலும், அத்தகைய சம்பவங்களை எவ்வாறு கண்டறிவது என்பதையும், அந்த வழிகாட்டுதல்கள் உட்படுத்தியிருக்கும்.
------
இதனிடையே, பல தரப்பினரின் அதிருப்தியை தூண்டக்கூடும் என்பதால், மின்னியல் சிகரெட் அல்லது வேப் விற்பனைத் தடையை எடுத்தவுடன் செயல்படுத்திவிட முடியாது என சுகாதர அமைச்சு கூறியுள்ளது.
ஆனால் அத்தடை நிச்சயம் நாட்டில் அமுலுக்கு வரும் என அது உறுதியளித்தது.
-----
மின் விளம்பர பலகைகளுக்கு கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அம்மாதிரியான விளம்பர பலகைகள் அதிகமான ஒளியுடன், வேகமாக மாறும் படங்களைக் காண்பிப்பது, சாலையில் செல்லும் வாகனமோட்டிகளின் கவனத்தை திசைத்திருப்பும் அபாயத்தைக் கொண்டிருப்பதாக அச்சங்கம் விளக்கியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather