← Back to list
மித்ரா புறக்கணிக்கப்படவில்லை !- பிரதமர்
Aug 19, 2025

மித்ரா ஒரு போதும் புறக்கணிக்கப்படாது!
Madani அரசாங்கம் அனைவருக்கும் சமமானதே என்றும், மக்கள் நல விவகாரத்தில் இன பாகுபாடு என்றுமே தமது தலைமையில் காட்டப்படாது என, பிரதமர் DSAI உறுதியளித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கென வழங்கப்பட்ட 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
எனினும் கடந்தாண்டு இந்திய சமுதாயத்தினரின் வளர்ச்சிக்காக மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகையின் மதிப்பு ஒரு பில்லியன் ரிங்கிட்டை எட்டியிருப்பதாக பிரதமர் இன்று மக்களவையில் தெரிவித்தார்.
விவரம் அறியாது, அரசாங்கம் இந்திய சமூகத்தை ஓரங்கட்டிவிட்டதாக பொதுவாக ஒரு கருத்தை கூறுவது சரியல்ல என அவர் கூறினார்.
அதே சமயம் இந்திய சமூகத்திற்கான உதவி MITRA திட்டத்தின் மூலம் மட்டுமே கிடைக்க பெறுகிறது என கூறப்படுவது உண்மையல்ல.
அதை தவிர்த்தும் வெவ்வேறு அமைச்சுக்களின் கீழ் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருவதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.
2022ஆம் ஆண்டு இந்தியர்களுக்காக 500 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு STR உதவித் தொகைக்காக வழங்கப்பட்டது.
அத்தொகை இவ்வாண்டு 972 மில்லியனாக உயர்ந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதனிடையே இந்திய சமூகத்திற்காக, 1.2 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வீட்டுவசதி கடன் உத்தரவாதத் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்தும் காரணத்தினால், தமிழ் பள்ளிகளின் அறிவியல் கூடங்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி தருவதற்காக, 50 லட்சம்்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
மேலும், TVET தொழிற்பயிற்சி வழங்க தேர்ந்தெடுக்கபட்ட மாணவர்களை சீனாவிற்கு அனுப்பவும், இன்னும் சிலருக்கு நமது நாட்டிலே பயிற்சி வழங்கவும் வழி வகுக்கப்பட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather