← Back to list
உணவுகள் வகைப்படுத்தப்படும் !
Aug 05, 2025

உணவுகளில் சத்து வகைகளை வகைப்படுத்த ஊட்டச்சத்து மதிப்பீட்டு முறையை சுகாதார அமைச்சு விரைவில் அறிமுகப்படுத்தும் !
அது, ஆரோக்கியமான உணவுமுறை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும்.
A தரம் கொண்டவை ஆரோக்கியமான உணவுகளாகவும், B தரம் கொண்டவை ஆரோக்கியமற்ற உணவுகளாகவும் வகைப்படுத்தப்படும்.
அதே நேரத்தில், B தர உணவுகள் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை.
ஆரோக்கியமற்ற உணவுகள் தெளிவாக “ஆரோக்கியமற்றது” என அடையாளப்படுத்தப்படும்.
எனவே அதுபோன்ற உணவை எடுக்கக் கூடாது,சாப்பிடக்கூடாது என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்வார்கள் .
இன்று நாடாளுமன்றத்தில் நடந்த ஆரோக்கியமான உணவு குறித்த உரையாடலில் கலந்து கொண்ட பிறகு, சுகாதார அமைச்சர் அதனை தெரிவித்தார்.
மேலும், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ விழாக்களில் இனிப்புப் பானங்கள் பரிமாறப்படுவதைத் தவிர்த்து, காய்கறிகள், தானிய வகைகள் மற்றும் பால் வழங்குவதை ஊக்குவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
------
சபாவில் படிவம் 1 மாணவி, Zara Qairina வின் மரணம் தொடர்பான விசாரணையில், சட்ட நடைமுறையை மதிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கையை தற்போது சட்ட துறை அலுவலகம் பரிசீலித்து வருவதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
விசாரணை அறிக்கை முழுமையடையவில்லை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கைக்காக காவல்துறையிடம் திருப்பி அனுப்பப்படும் என்றும் அவர் சொன்னார்.
முன்னதாக , Zara Qairina வின் குடும்பத்தினர், விசாரணை அறிக்கை இன்னும் முழுமையடையவில்லை என கூறியிருந்தனர்.
------
பினாங்கில், பொது மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் முதியோருக்கான தனித்துவமான உதவி முகப்புகள் அமைக்கப்பட வேண்டும் என மாநில இந்து சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அதன் மூலம், நோயாளிகள் சிகிச்சையை எளிதாகப் பெறும் சூழல் உருவாகும் என அச்சங்கம் கூறியது.
-------
Lesen kopi O என்ற பெயரில் பயிற்சி இல்லாமல் ஓட்டுநர் உரிமம் வழங்கும் விளம்பரம் தொடர்பாக, சாலைப் போக்குவரத்துத் துறைக்கு புகார் கிடைத்துள்ளது.
விளம்பரம் கொடுத்த அந்தக் கணக்கு பொய்யானது என JPJ தெரிவித்ததோடு, பொது மக்கள் இம்மாதிரியான போலியான விளம்பரங்களை நம்பி ஏமாந்து விட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
--------------
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையேயான எல்லை மோதலைத் தொடர்ந்து, போர் நிறுத்தத்தை உறுதி செய்ய, ஆசியான் கண்காணிப்புக் குழு ஒன்றை அனுப்ப, மலேசியா தயாராக இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
-------
சமூக ஊடக பிரபலம் ஒருவர் வீடற்ற நபர் ஒருவருக்கு கோழி எலும்புகளை வழங்கியதாக வந்த புகார்களை அடுத்து , MCMC விசாரணையைத் தொடங்கியுள்ளது.
--------
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather