← Back to list
குழந்தை மரணம்; மாமா நீதிமன்றத்தில் !
Jul 30, 2025
சிலாங்கூர் சுங்கை பூலோவில், நெருநாய் கூட்டத்தால் தாக்கப்பட்டதால், குழந்தை ஒன்று உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 19 வயது அதன் மாமா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார் !
அவரின் கவனிப்பில் தான், அக்குழந்தை விட்டுச் செல்லப்பட்டது.
சம்பந்தப்பட்ட அந்நபர், அக்குழந்தை அந்நாய்களால் தாக்கப்பட்டதும் கூட உணராமல் உறங்கிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
----------
சிலாங்கூர் காஜாங்கில், ஆசிரியரை குத்தி தாக்கியதாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, 14 வயது பள்ளி மாணவன் ஒருவன் ஒப்புக்கொண்டுள்ளான் !
வகுப்பைத் தவறவிட்டதற்காக ஆசிரியர் அவனைத் திட்டிய பிறகு அச்சம்பவம் நடந்தது காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
--------
இவ்வாண்டு இதுவரை, இந்திய சமூகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மொத்தம் 16 உயர் தாக்கத் திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன !
அரசாங்கம், கல்வி, ஆன்மிகம், கலாச்சாரம், சமூக நலன் ஆகிய துறைகளில் முன்னேற்றம் செய்வதற்காக, புதிய திட்டங்களை தயாரித்துள்ளதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
----------
அடுத்து வரும் பள்ளி விடுமுறை மற்றும் தேசிய தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட பொது விடுமுறைகளை முன்னிட்டு, KL Sentral-Padang Besar இடையில், 2 கூடுதல் ETS ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்ட்டுள்ளன !
அதற்கான டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணி முதல் விற்பனைக்கு விடப்படும் என KTMB தெரிவித்துள்ளது.
------------
பல மாடிகள் கொண்ட பள்ளிகளைக் கட்டும் திட்டத்தின் வழிகாட்டுதல்கள் செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், அவை கூடிய விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather