← Back to list
இந்தியர்களின் கவலைகள் புறக்கணிக்கபடவில்லை !
Jul 29, 2025

இந்திய சமூகத்தைப் பாதிக்கும் கவலைகள் உண்மையில் அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் தீர்க்கப்படுகின்றன !
இந்திய சமூகப் பிரச்சினை ஓரங்கட்டப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி அவ்வாறு கூறினார்.
இந்தியர்களின் கல்வி உள்ளிட்ட நிறைய விஷயங்களுக்கு, அரசாங்கம் உதவி புரிந்து வருவதாக அவர் கூறினார்.
---------
ஆக்டோபர் 1-ஆம் தேதி முதல், தேதி வேகக் கட்டுப்பாட்டு சாதனம் பொருத்தப்படாத, வணிக வாகனங்கள் சாலைகளில் ஓட அனுமதிக்கப்படாது !
ஆக்டோபர் தொடங்கி, கட்டம் கட்டமாக அச்சாதனம் பொருத்தப்படும் நிலையில், அச்சாதனத்தைப் பொருத்திய பின்னரே, அவ்வாகனங்கள் சாலையில் செலுத்த அனுமதிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கனரக வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், குறிப்பாக பேருந்துகள் மற்றும் லாரிகளை உட்படுத்திய விபத்துகளின் அபாயத்தைக் குறைக்கவும், அது உதவும்.
----------
குழந்தைகளை உட்படுத்திய கிட்டத்தட்ட 1,400 ஆபாச உள்ளடக்கங்கள், சமூக வலைத் தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக, தொடர்புத்துறை அமைச்சர் Datuk Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.
MCMC-யின் கோரிக்கையைத் தொடர்ந்து, அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
-----------
டோல் சாவடிகளை நீக்குவது எளிதல்ல என்றும், அதை நீக்கினால் நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளுக்கு, அதிகளவில் செலவாகும் என்றும் பொதுப்பணித் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
---------
ஜொகூர் பாருவில், உலோக சுத்தியலால் 12 வயது சிறுமியைத் தாக்கியதாகக் நம்பப்படும் 39 வயது நபர் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளார் !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather