← Back to list
போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன தாய்லாந்தும் கம்போடியாவும் !
Jul 25, 2025

தாய்லாந்தும் கம்போடியாவும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
இரு நாடுகளின் தலைவர்களும், சர்ச்சை ஏற்படும் எல்லைப் பகுதிகளில் இருந்து தங்கள் படைகளை விலக்க ஒப்புக்கொண்டுள்ளதாக, ஆசியான் தலைவரான DSAI தெரிவித்துள்ளார்.
அவர், அது குறித்து அவ்விரு நாட்டு தலைவர்களுடன் பேசியுள்ளார்.
என்றாலும், போர் நிறுத்ததைச் செயல்படுத்த சிறிது காலம் பிடிக்கும் என பிரதமர் கூறினார்.
முன்னதாக, தாய்லாந்து கம்போடிய எல்லைப் பகுதியில் நடந்த சண்டையில் 16 பேர் உயிரிழந்தனர்.
அதில், பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
கம்போடியா, இதுவரை உயிரிழப்புகளின் எண்ணிக்கையை வெளியிடவில்லை.
-------
கோலாலும்பூர், Dataran Merdeka-வில் நாளை அமைதி பேரணி நடைப்பெற்றாலும், KL-ல் அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் இடையூறுகளின்றி சீராகவே செயல்படும்.
அதில் KTMB மற்றும் Prasarana-வின் ரயில் சேவைகளும் அடங்கும் என, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது
இதனிடையே, Bank Negara மற்றும் கோலாலம்பூர் நிலையங்கள் மூடப்படும் என்ற சமூக ஊடக ஆருடங்களை, KTMB முற்றிலும் மறுத்துள்ளது.
------
பிரதமரின் பதவிக்காலம் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் அல்லது இரண்டு முறைகளாகக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரை இன்னும் ஆய்வுக் கட்டத்தில் உள்ளது!
அதன் தொடர்பில், நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்து பேசப்பட்டு வருவதாக, சட்ட சீர்திருத்த அமைச்சர் சொன்னார்.
-------
சரவாக் Samarahan-னில் புதிய அனைத்துலக விமான நிலையத்தை அமைக்கும் சாத்தியங்கள் குறித்து, ஆய்வுச் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு இறுதிக்குள் அது குறித்து முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather