Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

M40 வர்கத்தினர் பொறுமை காக்க வேண்டும் !

Jul 24, 2025


m40 வர்கத்தினர் பொறுமை காக்க வேண்டும் !

நடுத்தர வருமானம் ஈட்டுபவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் ! 

M40 வர்கத்தினரை பிரதமர்  அவ்வாறு  கேட்டுக்கொண்டுள்ளார். 

வாழ்க்கைச் செலவீனங்கள் அதிகரித்து வருவது குறித்த கவலைகளை நிவர்த்தி செய்ய, அரசாங்கத்துக்கு காலாவகாசம் தேவை என அவர் கூறினார்.   

RON95 ரக பெட்ரோல் விலை குறைப்பு, 10 நெடுஞ்சாலைகளில், டோல் கட்டணம் உயுர்த்தப்படாதது உள்ளிட்ட நன்மைகள், M40 வர்கத்தினரும் அனுபவிப்பர் என அவர் சொன்னார்.  

---------- 

இதனிடையே, SARA திட்டத்தின் கீழ், வழங்கப்படும் 100 ரிங்கிட் உதவி தொகையை குறைத்து மதிப்பிட வேண்டாம். 

அது குறைந்த வருமானம் பெருபவர்களுக்கு மிக முக்கியமானது என நிதி அமைச்சருமாகிய பிரதமர் DSAI தெரிவித்துள்ளார். 

நடப்பில் இருக்கும் STR , i-SARA உதவித் திட்டங்களுடன் சேர்கையில், அது மதிக்கதக்க தொகைதான் என்பதை, அவர் கூறினார். 

-------- 

தப்பியோடிய தொழிலதிபர் Jho Low-வின்  இருப்பிடத்தை உறுதிப்படுத்தும் எந்தவொரு உறுதியான ஆதாரமும் இதுவரை அரசாங்கத்திற்கு கிடைக்கவில்லை.  

அவர் சீனாவில் போலி கடப்பிதழைப் பயன்படுத்தி ஆடம்பர வாழ்க்கை அனுபவித்து கொண்டிருப்பதாக வந்த வெளிநாட்டு ஊடகத்தின் தகவலை அடுத்து, உள்துறை அமைச்சு அவ்வாறு கூறியது.  

1MDB ஊழல் குற்றச்சாட்டில், Jho Low மலேசியா, அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளால் தேடப்பட்டு வருகிறார்.  

--------- 

சிலாங்கூர் Sg. Buloh-வில் குழந்தை ஒன்று தெருநாய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில், 19 வயதான அக்குழந்தையின் மாமாவை காவல் துறை கைதுச் செய்துள்ளது. 

முன்னதாக, குடும்ப உறுப்பினர்கள் 3 பேரிடமிருந்து, அத்துறை வாக்குமூலங்களைப் பதிவுச் செய்தது. 

---------

தாய்லாந்து கம்போடியப் படைகளுக்கு இடையே நடந்த எல்லை மோதலில், குறைந்தது 12 பேர் இறந்துள்ளதாக தாய்லாந்து கூறியுள்ளது. 

உயிரிழந்தவர்களில் 11 பேர் துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய பொதுமக்கள் என, அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us