← Back to list
பிரதமரின் சிறப்பு அறிவிப்பு...
Jul 23, 2025

18 வயதுக்கு மேற்பட்ட எல்லா மலேசியர்களும் நூரு ரங்கிட் சிறப்பு உதவித் தொகையைப் பெற்று பயன்பெறவுள்ளனர்!
மடானி அரசாங்கம் MyKad அடையாள அட்டை மூலம் அத்தொகையை விநியோகிக்கவிருப்பதாக பிரதமர் DSAI அறிவித்துள்ளார்.
ஆகஸ்டு 31ஆம் தேதி தொடங்கி 22 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் அதனைப் பெறுவர்.
நாடு முழுவதுமுள்ள நாலாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில் பொருட்களை வாங்க மட்டுமே அத்தொகையைப் பயன்படுத்த முடியும்.
இதனிடையே மலேசிய தினத்தை ஒட்டி, இவ்வாண்டு செப்டம்பர் 15ஆம் தேதியை கூடுதல் சிறப்பு விடுமுறையாக அறிவித்துள்ளார் பிரதமர்.
இலக்கு வைக்கப்பட்ட உதவித் திட்டம் ஒன்றின் கீழ், ரோன் 95 ரக பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென்னாகக் குறைக்கப்படுகிறது.
மலேசியர்களுக்கு மட்டுமான அந்த உதவித் தொகை குறித்த அறிவிப்பு செப்டம்பர் இறுதி வாக்கில் வெளிவரும் என்றார் அவர்.
பத்து நெடுஞ்சாலைகளின் டோல் கட்டணம் உயர்த்தப்படாது.
நடப்பு டோல் கட்டணத்தை நிர்வகிக்க அரசாங்கம் 500 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
மலேசியர்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் நோக்கிலான இப்புதிய அறிவிப்புகளை பிரதமர் சற்று முன்னர் வெளியிட்டார்.
---------
கடந்த ஈராண்டுகளாக, இளைஞர்களிடையே போதை பொருள் பழக்கம் அதிகரித்து வருகின்றது.
2024ல் 15 முதல் 30 வயதுடைய இளையர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம், 19.3 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது.
அதில் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை 34.5விழுக்காடு ஆகும்.
------
மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மலேசிய மருத்துவர் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
சம்பள உயர்வு, ஊக்கத்தொகை, வேலை வாய்ப்பு பாதுகாப்பு, பயிற்சி வாய்ப்புகள் போன்றவை பணியாளர்களைப் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கைகளாக உள்ளன.
தொழில்நுட்ப மாறுபாடுகளோடு பொருந்தும், தரமான சுகாதார அமைப்பை உருவாக்க அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பாதாக MMA சொன்னது.
--------
சிலாங்கூர் பூச்சோங்கில் ஏற்பட்ட தகராறுக்குப் பிறகு ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல் துறை மூன்று சந்தேகநபர்களை தேடி வருகிறது.
-------
ஏர் இந்தியா தனது Boeing 787 மற்றும் 737 விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு விசை மீதான ஆய்வு முடித்துள்ளது..
அதில், எந்தப் பிரச்சினையும் கண்டறியப்படவில்லை.
கடந்த மாதம் அமெதாபாத்தில் அந்நிறுவனத்தின் விமானத்தை உட்பட்படுத்தி நிகழ்ந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.
------
அமெரிக்கா ஜப்பான் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கைாயெழுத்தாகியுள்ளது!
அவ்வொப்பந்தத்தில், ஜப்பானுக்கு விதிக்கபடவிருந்த இருபத்து ஐந்து விழுக்காட்டு வரி பதினைந்து விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather