← Back to list
கோரோக் ஆறு பகுதியில் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் !
Jul 08, 2025

கெடாவில், ஆற்றில் கார் விழுந்து அறுவர் உயிரிழந்த சாலைப் பகுதியில், பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான வழிகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது !
அப்பகுதியில் தடுப்புசுவர் மற்றும் தெருவிளக்குகளை நிறுவுவது குறித்து, அரசாங்கம் பரிசீலித்து வருவதாக துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த சாலை, மோசமான வெளிச்சம் மற்றும் தடுப்புசுவர்கள் இல்லாததால், வாகனங்கள் ஆற்றில் விழும் பழைய வரலாற்றைக் கொண்டுள்ளது.
தீயணைப்பு, மீட்புத் துறையின் தகவல்படி, 2012 முதல் 10 மரணங்களை உட்படுத்திய இதுபோன்ற 13 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
-------------
சிலாங்கூர் Putra Heights எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளின் பழுதுபார்ப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன !
அட்டவணையிடப்பட்ட தேதிக்கு முன்பே அப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக, மாநில Menteri Besar தெரிவித்துள்ளார்.
அப்பணிகள் 24 விழுக்காடு வரை நிறைவடைந்துள்ளதாக அவர் கூறினார்.
நோன்புப் பெருநாள் இரண்டாவது நாளில் நிகழ்ந்த அவ்வெடி விபத்தில், 81 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன.
-----------
தி.நவீனைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நால்வர் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது !
2021-இல் புதிய ஆதாரங்கள் அடிப்படையில் ஐந்தாவதாக இன்னொரு நபர் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
அந்த விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அதன் முடிவு வரும் வரை, அவ்வழக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
-----------
சிலாங்கூர் செப்பாங்கில் உள்ள ஓர் ஆலய குருக்களால், பெண் ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்ததாக காவல்துறை தெரிவித்தது.
-----------
நாடு முழுவதும் நேற்று மட்டும், 1,800-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன; அதில் 16 மரணங்கள் பதிவாகின.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather