← Back to list
எடையைக் குறைத்தால் தான் பதவி உயர்வு!
Jul 04, 2025

அழகு சாதன தொழிலின் புதிய வழிகாட்டுதல்களை, உள்நாட்டு வாணிக வாழ்க்கை செலவீன அமைச்சு இறுதிச் செய்துள்ளது!
அவை அமைச்சரவைக்குக் கொண்டுச் செல்லப்படவிருப்பதாக, துணை அமைச்சர் Datuk Dr Fuziah Salleh தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டு உருவான அந்த பழைய வழிகாட்டுதல்களில் சில திருத்தங்கள் செய்து, காலமாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் ஏற்ப அவற்றை மேம்படுத்தியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் அழகியல் துறையின் 2023ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, அதாவது GDP 13.5 பில்லியன் ரிங்கிட்டாகும்.
அதிவேக வளர்ச்சி கண்டு வரும் இத்துறையை மேம்படுத்தும் அதேவேளை, பயனர்களையும் பாதுகாக்க, அந்த வழிகாட்டுதல்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக Fuziah மேலும் சொன்னார்.
-----
அதிக உடல் எடையைக் கொண்ட மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு இல்லை!
அடுத்தாண்டிலிருந்து அவ்விதி அமுலுக்கு வருவதாக, MACC தலைமை ஆணையர் Tan Sri Azam Baki திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
MACC அதிகாரிகளின் ஆரோக்கியம் சிறந்த நிலையில் இருப்பதை உறுதிச் செய்வதே அதன் நோக்கம்.
உடல் பருமன் பிரச்னை ஒருவரது தோற்றத்தையும், சுகாதாரத்தையும் மட்டுமல்ல, மக்களுக்கு வழங்கக்கூடிய சேவையையும் வெகுவாக பாதிக்கும் என அவர் சொன்னார்.
அப்புதிய உத்தரவு மீதான சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்பட்டு, எல்லா MACC அதிகாரிகளும் தங்களின் உடல் ஆரோக்கியத்தை நிர்வகிக்க ஆறு மாத கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.
------
கடந்த செவ்வாய்க்கிழமை அமுலுக்கு வந்த மின்கட்டண உயர்வால், பல்கலைக்கழக மாணவர்களுக்கு எந்த பாதிப்பு இல்லை!
மறுசீரமைக்கப்பட்ட மின்சார கட்டண விகிதத்தால் பாதிப்பை எதிர்நோக்காத, 23 மில்லியன் வீட்டுப் பயனர்களில் அவர்களும் அடங்குவர் என TNB தெரிவித்துள்ளது.
மேலும் Time of Use திட்டத்தின் கீழ், உச்ச நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் மின் சாதனங்களைப் பயன்படுத்தினால், வழக்கத்தை விட குறைந்த கட்டணத்தையே அவர்கள் செலுத்த வேண்டி வரும்.
ஆயிரம் கிலோவாட்டுக்கும் குறைவான மாதாந்திர மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு, கட்டண கழிவு வழங்குவது உட்பட, வர்த்தகம் சாராத பயனர்களின் சுமையைக் குறைக்க TNB பல்வேறு திட்டங்களை அமுலில் வைத்துள்ளது.
-------
போதிய சலுகைகள் இல்லாததால், தாதியர் பணி ஈர்ப்புடையதாக இல்லை என சமூக ஊடகங்களில் பரவி வரும் கூற்றை, மறுத்துள்ளது சுகாதார அமைச்சு!
Allowance தொகை, அரசு சேவை சலுகைகள், ஓய்வூதியங்கள் என, தகுதிக்கேற்றவாறு அரசு ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும் சகல வசதிகளும், தாதிகளுக்கும் வழங்கப்பட்டு தான் வருகிறது என, அவ்வமைச்சு உறுதியாகக் கூறியது.
-----
சிலாங்கூர், Puchongகில் மூன்று வயது பிள்ளையைக் கடித்த நாயின் உரிமையாளரைக் காவல் துறை கைது செய்துள்ளது!
60 வயது மதிக்கத்தக்க அம்மமாது German Shepard கலவையிலான அந்த நாய்க்கு, உரிமம் வைத்திராதது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-------
திரங்கானுவில், இருக்கை வார்ப்பட்டை அணியத் தவறியதற்காக, பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கும் மூன்று பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது!
இனி விரைவுப்பேருந்து மற்றும் சுற்றுலா பேருந்தின் ஓட்டுனர்களும் பயணிகளும், கட்டாயம் இருக்கை வார்ப்பட்டை அணிய வேண்டும் என்ற புதிய சட்டம் அமுலுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather