← Back to list
திவாலானவர்களுக்கும் கடனுதவி உண்டு- ரமணன்!
Jul 02, 2025

இந்திய தொழில்முனைவோருக்கான, அரசாங்கத்தின் பல்வேறு கடனுதவி திட்டங்களைப் பெற தகுதியுடையவர்களுக்கு, சமமான வாய்ப்பு வழங்கப்பட்டு வந்துள்ளது!
அவ்வகையில் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாததால், CCRIS மற்றும் CTOS முறையில் சிக்கல் உள்ளவர்கள், திவால் பட்டியலில் இருப்பவர்கள் என, ஏராளமான மகளிருக்கு பெண் திட்டத்தின் மூலம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதனை அவர்கள் சரியாகத் திருப்பிச் செலுத்துவதும் பாராட்டுக்குரியது என்கிறார், தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் DS Ramanan Ramakrishnan.
அவர்களில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் விகிதம், 0.02ஆக மட்டுமே இருப்பதாக ரமணன் மேலும் கூறினார்.
இதனிடையே கடந்தாண்டு ஆறாயிரம் இந்திய தொழில்முனைவோர், அவ்வமைச்சின் உதவித் திட்டங்களால் நன்மையடைந்துள்ளனர்.
அவ்வெண்ணிக்கை இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும், எண்ணாயிரத்து நானூரைக் கடந்துள்ளது எனவும் ரமணன் கூறினார்.
ஆர்வமுள்ளோர் அமைச்சின் அகப்பக்கம், வங்கி கிளைகள், கைப்பேசி செயலி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் விண்ணப்பிக்கும் வசதியும் இருக்கின்றன.
ஏற்கனவே ஆயிரக்கணக்கான உள்நாட்டு இந்திய தொழில்முனைவோருக்கு நன்மையளிக்கும் இந்த உதவித் திட்டங்கள் குறித்த தகவல்கள், இன்னும் அதிகமானோரை சென்று சேர வேண்டும் என ரமணன் மேலும் வலியுறுத்தினார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather