← Back to list
DMS-ஐ துரிதப்படுத்திகிறது, அரசாங்கம்!
Jul 01, 2025

ஓட்டுநர் கண்காணிப்பு அமைப்பை அறிமுகப்படுத்தும் வேலைகளை, அரசாங்கம் துரிதப்படுத்தி வருகிறது!
சுற்றுலா போக்குவரத்து வாகன ஓட்டுநர்கள், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தகுதியானவர்களா என்பதை உறுதி செயவதை அவ்வமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
படகு மற்றும் பேருந்து செலுத்துபவர்கள் உட்பட, அனைத்து ஓட்டுனர்களையும் கட்டாய போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்துவதும் அதில் அடங்கும் என, சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சு கூறியது.
விபத்துக்களை வெகுவாகக் குறைக்க, சுற்றுலா போக்குவரத்து வாகனங்களுக்கான தற்போதைய ஒழுங்குமுறை கட்டமைப்பும் புதுப்பிக்கப்படும்.
முன்னதாக, திரங்கானு Perhentian தீவில் நிகழ்ந்த படகு விபத்தில், மூன்று பேர் உயிரிழந்து ஒன்பது பேர் காயமடைந்ததை அடுத்து, அரசாங்கம் அந்த அணுகுமுறையைக் கையாள்கிறது.
----
காவல் துறையினர்களின் நிபுணத்துவத்துவம் எப்போதும் நிலைநிறுத்தப்பட வேண்டும்!
அதே சமயம் அதிகாரிகளின் நல்வாழ்வு புறக்கணிக்கப்படக்கூடாது என பிரதமர் DSAI அறிவுறுத்தியிருக்கிறார்.
கடந்த வாரம், தேசிய காவல் படை தலைவராக நியமிக்கப்பட்ட Datuk Seri Mohd Khalid Ismailலை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது, தாம் அந்த நினைவூட்டலை வழங்கியதாக பிரதமர் தனது Facebookகில் பதிவிட்டுள்ளார்.
அச்சந்திப்பின் போது, தொழில்நுட்ப வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு உட்பட, நாட்டின் நடப்பு பாதுகாப்பு சவால்கள் குறித்தும் பேசப்பட்டதாக அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
-----
KL, Segambutடில் மூன்று வெளிநாட்டவர்களைக் கைது செய்து, வீடொன்றிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலி ஆயுதங்களைப் பறிமுதல் செய்துள்ளது காவல் துறை.
அப்போலி ஆயுதங்கள் சமூக ஊடகங்களில் விற்கப்பட்டு வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது
-----
பினாங்கில், வங்கி அதிகாரி மற்றும் காவலதிகாரி போல் தங்களை தொலைபேசியில் அடையாளம் காட்டிக் கொண்ட நபர்களை நம்பி, ஆசிரியை ஒருவர் எட்டு லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார்.
-----
இந்தியா, தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
குறைந்தது 34 பேர் காயமடைந்துள்ளனர்.
-----
மேற்கு துருக்கியே, Izmir-ரில் தொடர்ந்து ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்பகுதிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 14 helicopters மூலம் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather